சமயநல்லுாரில் அ.தி.மு.க., பிரசாரம்

வாடிப்பட்டி: சமயநல்லுாரில் அ.தி.மு.க.,சார்பில் திண்ணைப் பிரசார கூட்டம் நடந்தது.

மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், காளிதாஸ், கணேசன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி தலைவர் மலையாளம் வரவேற்றார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், 'தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து, குடிநீர் வரி, மின்சாரம், விலைவாசி உயர்வு, கைவிடப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள்' குறித்து பேசினார். பின் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினார். ஜெ., பேரவை துணைச் செயலாளர் ராஜேஷ் கண்ணா, நகர செயலாளர் அசோக்குமார், ஐ.டி.,பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன் பங்கேற்றனர்.

Advertisement