யோகாசன சங்க பொதுக்குழு கூட்டம்

திருநகர்: தமிழ்நாடு யோகாசன சங்க 39வது மாநில பொதுக்குழுக் கூட்டம் தனக்கன்குளம் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையத்தில் நடந்தது. பொதுச் செயலாளர் யோகி ராமலிங்கம் தலைமை வகித்தார்.

உதவி செயலாளர் ராஜகோபால் வரவேற்றார். 38 மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் பங்கேற்றனர். 39வது மாநில யோகாசன போட்டியை திருவண்ணாமலை, 40வது போட்டியை ஈரோட்டில் நடத்துவது, அனைத்து மாவட்டங்களிலும் அரசு யோகா மையம் அமைத்து ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சீனா சிவா யுக யோகா மைய நிறுவனர் சிவானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்க செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement