சித்தாண்டீஸ்வரர் கோவிலில் 15ல் மஹா சிவராத்திரி விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சித்தாண்டீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா வரும், 15ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுாரில் உள்ள, ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நாளை மாலை, 3:00 மணி முதல் இரவு, 7:00 மணிக்கு சனிப்பிரதோஷ பூஜையுடன் துவங்குகிறது.

வரும், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு தெய்வகுளம் காளியம்மன் கோவிலுக்கு தீர்த்ததுக்கு புறப்படுதல், மாலை, 4:00 மணிக்கு தீர்த்தம் கோவில் வந்தடைதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு, 9:00 மணிக்கு முதல் கால அபிேஷகம், இரவு, 10:00 மணிக்கு ஒயில் கும்மியாட்டம் நடக்கிறது.

நள்ளிரவு, 12:00 மணிக்கு இரண்டாம் கால அபிேஷகம், வரும், 16ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு மூன்றாம் கால அபிேஷகம், காலை, 4:00 மணிக்கு மணிவாசகரும், திருவாசகமும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.

காலை, 5:30 மணிக்கு நான்காம் கால அபிேஷகம், 6:30 மணிக்கு பள்ளய பூஜை, காலை, 10:00 மணிக்கு உலக வேள்விக்குழு நடத்தும் ஆன்மிக இசைக்கலை விழா, காலை, 10:30 மணிக்கு மஹா அபிேஷகம், மதியம் மஹா அலங்காரம், மஹா தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

அன்று, காலை, 8:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை அன்னதானம் நடக்கிறது. வரும், 17ம் தேதி காலை, 11:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை அமாவாசை பூஜை நடக்கிறது.

Advertisement