துாய்மை பணியாளருக்கு சேவை மையம் துவக்கம்

காந்திபுரம்: மாநிலத்திலேயே முதன்முறையாக கோவை மாநகராட்சி சார்பில் துாய்மை பணியாளர் சேவை மையம் அமைக்கப்பட்டது. டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் துவக்கப்பட்டிருக்கிறது. துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி திறந்து வைத்தார். கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி முன்னிலை வகித்தனர். உதவி கமிஷனர் நித்யா வரவேற்றார்.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை செயல்படும். இ.எஸ்.ஐ. - பி.எப். தொடர்பான குறைகளுக்கு தீர்வு காணலாம்.

Advertisement