பேராசிரியர்கள் உண்ணாவிரதம்

நிலக்கோட்டை: கவுரவ விரிவுரையாளர்களின் பணி நிரந்தரம், 12 மாத சம்பளம் வழங்குதல், யு. ஜி. சி., நிர்ணயம் செய்த ரூ.57,800 ஊதியம், இ. எஸ். ஐ., பி.எப்., வழங்கிடவும், பெண் கவுரவ விரிவுரையாளர்கள் மகப்பேறு விடுப்பு, மகப்பேறில் இறந்தவர்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

பேராசிரியர், விரிவுரையாளர்களின் கூட்டமைப்பு பொறுப்பாளர் சுபஸ்ரீ தலைமை வகித்தார்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ ., தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நிலக்கோட்டை தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கருப்புசாமி பங்கேற்றனர்.

Advertisement