உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
சென்னை: '' உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள்'', அரசு பணிக்கு புதிதாக தேர்வாகி உள்ளவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
2025ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி உள்ளிட்ட போட்டி தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதன் பிறகு அவர் பேசியதாவது: அனைவருக்குமான முதல்வராக இருந்து வருகிறேன். படித்து முன்னேறி வந்த உங்களை பார்க்கும்போது உணர்ச்சி பெருக்கில் நின்று கொண்டு இருக்கிறேன். இந்த நாள் உங்கள் கனவுகள், உங்கள் பெற்றோர் கனவுகளை நிஜமாக்கிய நாள். உங்கள் குடும்பத்துக்கு பெருமை தேடி தந்த நாள். அந்த வகையில் பொன்னான நாள். டிஎன்பிஎஸ்சி, மருத்துவ பணியாளர் தேர்வுவாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 இளைஞர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் பெருமை கொள்கிறேன். பணி நியமனம் ஆணை என்பது உழைப்புக்கான அங்கீகாரம் மட்டும் அல்ல. எதிர்காலத்துக்குமான உத்தரவாதம்.
தமிழகம் முன்னேறும்
இளைஞர்கள் தான் தமிழகத்தின் எதிர்காலம். நீங்கள் முன்னேறும் போதுதான், தமிழகம், இந்தியா முன்னேறும். நீங்கள் கற்றதை சமுதாயத்தில் விதைக்க போகிறீர்கள். நீங்கள் அரசின் முகமாக செயல்பட போகிறீர்கள். நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் அரசு சிறப்பாக செயல்படும். மக்கள் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர் சிறப்பாக பணியாற்றினால் அறிவார்ந்த சமுதாயம் உருவாகும். சிறந்த தலைமுறை உருவாகும்.
நல்ல பெயர்
டாக்டர்கள் சிறப்பாக பணியாற்றும்போது குடும்பத்தினர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதனை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மக்களை தேடி குறைகளை தீர்த்து வைத்து உள்ளனர். 22 கோடி பட்டாக்கள் கிடைத்து உள்ளன. இதனால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து உள்ளது என்றால், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் காரணம். அரசியலில் இருக்கும் நாங்கள் கொள்கைகள் வகுக்கிறோம்.
திட்டம் தீட்டுகிறோம். பட்ஜெட் ஒதுக்கி நிதி ஒதுக்கிறோம். இதனை சிறப்பாக செயல்படுத்துவது அரசு ஊழியர்களின் கைகளில் இருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில்
டிஎன்பிஎஸ்சி மூலம் 45,126 பேரும்,
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 24,927 பேரும்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 12,894 பேரும்
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 11,244
கருணை அடிப்படையில் 5,899 பேரும்
பல்வேறு அரசு துறைகளில் 54,864 பேரும்
விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் 177 பேரும் என மொத்தம் 1,55,131 பேருக்கு அரசு பணி பெற்றுள்ளனர்.
நேர்மை
அன்னிய முதலீடு மூலம் 38 லட்சம் வேலைவாய்ப்புகளை உறுதி செய்து உள்ளோம்.
இளைஞர்களுக்கு வளமான எதிர்காலத்துக்காக கடுமையாக உழைத்து கொண்டு இருக்கிறோம். உங்கள் கடமையை மனசாட்சியோடு செய்யுங்கள். நேர்மையாக இருந்தால் அரசின் நேர்மை திறன் வெளிப்படும். நேரம் தவறாமல், மக்களை எளிதில் அணுகுபவர்களாக, இருந்தால் பெருமை தேடித் தரும். அரசுக்கு நேரத்தை கொடுக்கும் அதே நேரத்தில் உங்களின் உடல்நிலையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
Stalin ji every government employee has paid a fortune to your party members to get a job or transfer so they need to get back their investment . in business parlance we call Return on Investment . So issue a general guidelines and regulate the bribe amount in each category of government employee .It should be the best policy of Dravidian
காலையில் எழும்போதே, இன்று முப்பதாயிரம் கிடைக்குமா? இல்லை ஐம்பதாயிரம் கிடைக்குமா? என்று தான் நினைத்து கொண்டு அலுவலகம் வருகிறார்கள். தினமும் ஒருவரை கழுவில் ஏற்றினால் தான் தமிழக அரசு திருடர்களை திருத்த முடியும்.
Are you following that appa?
மக்களும் மனசாட்சிப்படி ஓட்டு போட்டால்?
சூப்பர் அறிவுரை. அப்போ இவ்வளவு நாளாக எப்படி செய்து கொண்டு இருந்தார்கள்? அறிவுரை ஊழியர்களுக்கு மட்டும் தானா?
செம ஜோக்கு இவர் ஆட்ச்சியில் இருந்து கோடியாக சம்பாதிப்பாராம் அரசு ஊழியர்களுக்கு மனசாட்ச்சி வேண்டுமாம். தமிழ்நாட்டு வாக்காளர்களே, நீங்கள் செய்த தவறு உலகமே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது யோசியுங்கள்
தங்கள் மனசாட்சி யோடு வேலை /சேவை செய்கிறீர்களா வேலை செய்ய விடுகிறீர்களா
அப்படி என்றால் இதுவரை அரசு ஊழியர்கள் மனசாட்சி படி வேலை செய்யவில்லை என்கிறாரா மாண்பு மிகு. இந்த வார்த்தைகளை அரசு ஊழியர்கள் ஆமோதிக்கிறார்களா ?
Very good advice. At the same time, elected Government whichever party/ies it belongs to / its representatives should also allow them to disge their duties without fear or favour
இரவு, பகலாக கஷ்டப்பட்டு டி.என்.பி.எஸ்சிக்கு படித்து தேர்வு பெற்றவர்கள் அவர்கள். இது என்ன பட்டமளிப்பு விழாவா? இல்லை ஸ்டாலின் கம்பெனியில் வேலைக்கு சேரப் போகிறார்களா? இவர் கையால் பணி நியமன ஆணையினை பெறுவதற்கு ? முன்பிருந்த தமிழக அரசாங்கங்களில் வீட்டிற்கு பணி நியமன ஆணை பதிவஞ்சலில் வரும். அதை வைத்து தேர்வு பெற்றவர்கள் உடன் பணியில் சேர்ந்து கொள்வார்கள்.காமராஜர் முதல் எடப்பாடி காலம் வரை இதுதான் நடைமுறை.இன்றைய முதலமைச்சர் இதைக் கூட தனக்கான விளம்பரமாக மாற்றிக் கொள்கிறார்.மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...