உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா? விஜய் வேண்டுமா? கேட்கிறார் விஜய்

81

சேலம்: ''மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. திமுக ஆட்சியே அவுட் ஆப் கண்ட்ரோல் தான். உங்களுக்கு யார் வேண்டும்; விஜயா அல்லது ஸ்டாலினா?'' என சேலம் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசுகையில் குறிப்பிட்டார்.


சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பேசியதாவது: தைரியம் தான் எல்லாத்துக்கும் அடிப்படை. எல்லாத்துக்கும் பவர். அப்படிப்பட பவர் எதில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் நம்மை ஏளனமாக பார்க்கிற நேரத்தில், நாம் யார் என்று நிரூபித்து காட்ட வேண்டும் என்று தோன்றும். ஒரு உத்வேகம் வரும். அப்படி நிரூபிக்கும் பாயிண்ட் எதில் இருந்து ஆரம்பிக்கிறது என்றால் எந்த விஷயத்தில் நம்மளை கிண்டலும், கேலியுமாக பேசுகிறார்களோ, அதே விஷயத்தை வைத்து பாசிட்டிவ் ஆக மாற்றுவதும், தீயாக மாற்றுவதும் அந்த இடத்தில் தான் பவர் ஆரம்பிக்கிறது. அப்படிப்பட்ட அந்த பவரை சொல்கிற உண்மையான பாயிண்டில் இருந்து ஆரம்பிக்கலாம்.

கிண்டலும், கேலியும்!




Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் பனையூரை விட்டு வெளியே வா, அப்படி என்று சொல்பவர்களுக்கு என் வீடு எது என்று தெரியுமா? முதலில் என் வீடு எங்கு இருக்கிறதா என்று தெரியுமா? என்னை சீண்டி பார்ப்பதாக நினைத்து கிண்டலும், கேலியுமாக பேசுபவர்களுக்கு நான் சொல்கிறேன். இந்த தமிழ்நாடு...தமிழ்நாடு என்று சொல்கிறார்களே மற்றவர்களுக்கு, அது மாநிலமாக இருக்கலாம். எனக்கு தாய் நாடான தமிழகம் தான் என்னுடைய வீடு. என் வீட்டில் 8 கோடி பேர். ஒட்டுமொத்த தமிழக மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம், என் உறவு, என் சொந்தம். இந்த 8 கோடி மக்கள் உடன் நிக்கப்போவது விஜய் மட்டும் தான்.

நீதி கேட்டு…!



தமிழகத்தின் முதல் படை வீரனாக, முதல் பாதுகாவலனாக உங்கள் கூடவே நிற்க வேண்டும் என்பது தான் எனக்கு குறிக்கோள். இன்னைக்கு இந்த விஜய் உங்களிடம் ஓட்டு கேட்டு மட்டுமே வரவில்லை. நீதி கேட்டும் வந்து இருக்கிறேன். உங்களுக்காக நீதி கேட்க தான் அரசியலுக்கே வந்தேன். ஆனால் இன்றைக்கு நான் உங்களிடம் நீதி கேட்பதற்காக வந்து இருக்கிறேன். இந்த விஜய் என்னங்க தப்பு செய்தான். தன்னை நேசித்த மக்களுக்காக அரசியலுக்கு வந்தான். அது ஒரு தப்பா? எல்லாத்தையும் ஒதுக்கிவிட்டு மக்களுக்காக மட்டும் வந்தான், அது ஒரு தப்பா?


@quote@மற்ற கட்சிகளுக்கு எல்லாம் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கொடுப்பார்கள், இடம் கொடுப்பார்கள். ஆனால் நமக்கு மட்டும் கொடுக்கவும் மாட்டார்கள், கொடுக்கவும் மாட்டார்கள், இது என்னங்க நியாயம்?quote

மக்களிடம் நீதி



நான் மக்களை சந்திக்கவும், மக்கள் என்னை சந்திக்கவும் உரிய இடமும், பாதுகாப்பும் மற்ற கட்சிகளுக்கும் எல்லாம் கொடுப்பார்கள், ஆனால் எனக்கு கொடுக்க மாட்டார்கள். கொடுக்கவும் விட மாட்டார்கள், இது என்னங்க நியாயம். எஸ்ஓபி என்று சொல்வார்கள். மற்றனர்களுக்கு அது ' Standard Operating Procedure' எனக்கு மட்டும் அது ஸ்டாலின் சார் ஆப்ரேட்டிங் procedure.


விஜய் உண்மையானவன், நமக்கு எதிராக சதி, பழி போடுகிறவர்கள் யார் என்று எனது சொந்தங்களாகிய உங்களுக்கு தெரியும். அதனால் நான் மக்களாகிய உங்களிடம் நீதி கேட்கிறேன். செல்பே எடுக்காத ஒரு கூட்டணி கணக்கு, செல்பே எடுக்காத ஒரு அற்த பழைய அர்த்மெட்டிக் கணக்கு. இது எல்லாம் வேலைக்கே ஆகாது. ஆணித்தரமாக அடித்து சொல்கிறேன்.

விசிலுக்கு தான்



காசு கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்று கனவு காண்கின்றனர். அதுவும் இந்த விஜய் வந்த பிறகு நடக்கவே நடக்காது. ஆயிரம், 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம், 5 ஆயிரம் என்று வண்டி வண்டியாக வந்து கொட்டுவார்கள். சாமி மேல சத்தியம் எல்லாம் வாங்குவார்கள். அப்படி தான் உங்களை இத்தனை வருடமாக ஏமாற்றி இருக்கிறார்கள். சந்தோஷமாக வாங்கி கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் பணம் தான். வாங்கிட்டு அவர்களின் காதில் விசில் அடித்து அனுப்புங்கள்.


@quote@நம்முடைய அடுத்த இளம் தலைமுறையினருக்கு ஒன்று சொல்கிறேன். இந்த பணத்தை கொடுத்து ஏமாற்றி ஓட்டு வாங்க வேண்டும் என்ற கலாசாரம் ஒழிய வேண்டும். quote

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்துக்கு தான்.

கொள்ளையடித்த பணம்




வேற யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். நீங்கள் கொள்ளை அடித்து வைத்து இருக்கும் பணம் எல்லாம் வீணாகத்தான் போகிறது. குப்பையில் தான் தூக்கி போட வேண்டும். உங்களுடைய ஊழல் ஆட்சியையும், மக்கள் குப்பையில் தான் தூக்கி போட போகிறார்கள். அடுத்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் குட்டி நண்பா, நண்பிகளே வீட்டில் டிவியில் பிரசாரத்தை பார்த்து கொண்டு இருப்பீர்கள். உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் நாங்கள் அரசியலுக்கு வந்து இருக்கிறோம். எல்லோரையும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லுங்கள். விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வையுங்கள்.

வெறுப்பு அரசியல்




எந்த கட்சியையும் அழிப்பதற்கோ, ஒழிப்பதற்காகவோ நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. தனிப்பட்ட கோபமோ, வன்மமோ யார் மேலேயும் கிடையாது. வெறுப்பு அரசியல் செய்வதற்கு அரசியலுக்கு வரவில்லை. அரசியல் ரீதியாக எதிரி யார் என்று முடிவு செய்துவிட்டு, தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்காக எங்களது நன்றி கடனை செலுத்துவதற்கு தான் அரசியலுக்கு வந்து இருக்கிறோம். அனுபவம் இல்லாதவர்களால் ஆட்சி அதிகாரத்தை செய்ய முடியும் என்று ஒரே விஷயத்தை சொல்லி அழுபவர்களுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

தில்லு, திராணி





@quote@அதிகாரத்தை பயன்படுத்தி மக்கள் பணத்தை கொள்ளையடித்ததை தவிர இவர்களுக்கு வேறு என்ன கொம்பு முளைத்த அனுபவம் இருக்குதா?quote அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அடுத்தவர்களின் முகவரியில் அரசியல்வாதியாக இருக்கும் இவர்கள் எல்லோருக்கும் ஒரு சவால். என்னை மாதிரி தனியாக, சொந்தமாக கட்சி ஆரம்பித்து, ஒரு சதவீதம் வாக்கு காட்டும் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா?


30 வருடமாக மக்கள் இயக்கமாக இருந்து இன்றைக்கு மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்து இந்த கூட்டணி கட்சிகளை மட்டுமே நம்பி இருக்கிற, 75 வருட கட்சி, 50 வருட கட்சி, இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இவர்களை எல்லாம் மீறி, இன்னைக்கு களத்தில் தனியாக நின்று இரண்டே வருடத்தில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30% மக்கள் ஆதரவை பெற்ற நமக்கு அனுபவம் இல்லையா?

அவர்களின் அனுபவம்




கட்சி ஆரம்பித்தவர்களை மறந்தது, கொள்கைகளை மறந்தது தான் அவர்களின் அனுபவம். நமக்கு கொள்ளை அடிப்பதில் அனுபவம் இல்லை தான். கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்து கொண்டு நேரடியாக சரண் அடைவது, மறைமுகமாக சரண் அடைவது, இந்த மாதிரி அனுபவம் எங்களுக்கு இல்லை. மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் சூப்பரான நல்லாட்சியை கொடுக்க முடியும். நல்லாட்சி கொடுப்பதற்கு மெத்த படித்த மேதாவிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
@quote@காமராஜர், எம்ஜிஆர் மாதிரி, மக்கள் சக்தியின் துணையால், மக்கள் மீது நல்ல அக்கறையுடன் இருக்கும் அதிகாரிகளின் துணையால் சூப்பரான நல்லாட்சி என்னால் கொடுக்க முடியும், செஞ்சு காட்டுறேன். quote

ஸ்டாலின் சாருக்கு கேள்வி





ஸ்டாலின் சாருக்கு மக்கள் சார்பில் ஒரு கேள்வி. மக்களுடைய கனவு என்ன என்று உங்களுக்கு தெரியுமா சார். மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தமிழக வெற்றிக்கழகத்தை ஆட்சி பீடத்தில் அமர வைக்க வேண்டும் என்பது தான், மக்களுடைய ஒரே கனவு. மக்கள் விரோத திமுக அரசு நிலைக்க கூடாது என்பது தான் மக்களுடைய கனவு. 100 சதவீதம் தூய சக்தி தவெக ஆட்சி அமைக்கும். அதில் உங்களுடைய கனவு பலிக்கும். தமிழகம் டில்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் என்று ஸ்டாலின் சார் அடிக்கடி சொல்லுவார்.

ஸ்டாலினா, விஜயா?




ஸ்டாலின் சார் சட்டம் ஒழுங்கில் அவுட் ஆப் கன்ட்ரோல். திமுக ஆட்சியே அவுட் ஆப் கன்ட்ரோல் தான். மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மக்களே ஒரு கேள்வி. விஜயை நம்புகிறீர்களா? ஸ்டாலின் சாரை நம்புகிறீர்களா? தைரியமாக இருங்கள், வரப்போவது உங்கள் ஆட்சி, நம்ம ஆட்சி. சமூக நீதிக்காக நல்ல ஆட்சி அமைப்போம். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்ம கூட மக்கள் இருக்கிறார்கள். இதுக்கு மேல என்ன வேணும்? நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம். இவ்வாறு விஜய் பேசினார்.


@block_G@

ஒருவர் பலி

இதற்கிடையே பிரசாரக் கூட்டத்தில் ஒரு மயங்கி விழுந்து உயிரிழந்தார். சுரஜ் என்பவர் உயிரிழந்த காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.block_G


தினமலர் நேரலை



சேலத்தில் விஜய் தலைமையில் நடந்த கட்சி நிகழ்ச்சி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement