ஊடுருவல்காரர்கள் ஓட்டுகள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கும் மம்தா; மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

7

கோல்கட்டா: ஊடுருவல்காரர்களின் பலத்துடன் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி மீண்டும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம்சாட்டி உள்ளார்.

கோல்கட்டாவில் அவர் அளித்த பேட்டி;

மேற்கு வங்கத்தில் கல்வித்துறை முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. அங்கு ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்திருக்கிறது. இந்த ஆட்சி இனி தொடரக்கூடாது. இம்முறை மம்தாவின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர். டபுள் இன்ஜின் அரசு வந்த பின்னர், ஆசிரியர்களுக்கும், கல்வித்துறைக்கும் மட்டுமே அதிக முன்னுரிமை தரப்படும்.

ஊடுருவல்காரர்களின் ஓட்டுகள் மூலம் மம்தா மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறார். ஆனால், மேற்கு வங்க மக்கள் இம்முறை தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் இங்கு நிச்சயம் மாற்றத்தை கொண்டு வருவார்கள்.

மாநிலத்தில் சட்டத்தின் படி தான் ஆட்சியை நடத்த வேண்டும். யாருடைய நெருக்கடி, அழுத்தம் மூலம் நிர்வாகத்தை நடத்தக்கூடாது.

இவ்வாறு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.

Advertisement