டில்லி பல்கலையில் முதல் முறையாக இலக்கிய விழா
புதுடில்லி,டில்லி பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, இலக்கிய விழா துவங்கியது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
டில்லி பல்கலைக்கழகத்தின் 104 ஆண்டு வரலாற்றில், முதல் முறையாக இலக்கிய விழா, கடந்த 12ம் தேதி துவங்கி, இன்று வரை நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பல்கலைக்கழக துணை வேந்தர் யோகேஷ் சிங், துவங்கி வைத்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பெயரிலான கருத்தரங்கு துவக்கப்பட்டது.
இந்த மூன்று நாள் இலக்கிய விழாவில், பிரபலமான பலர் பங்கேற்க உள்ளனர். நடிகர் - பாடலாசிரியர் - பாடகராக அறியப்படும் பியுஷ் மிஸ்ரா நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
டில்லி பல்கலைக்கழக இலக்கிய விழாவின் அமைப்பாளர் அனுாப் லாத்தர்,''இன்னும் மூன்றாண்டுகளில் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் மிளிரும். இந்தியாவின் இலக்கிய சிந் தனை உலகம் முழுவதும் எதிரொலிக்கும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு
-
சலுகை விலையில் வீடு, மனை வாங்க வழிகாட்டும் கூட்டுறவு சங்கங்கள்!
-
விற்காத வீடுகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வது ஏன்?
-
புதிய கட்டடத்தின் சுவர்களில் மேற்பூச்சு உதிர்வது ஏன்?
-
நிலத்தின் தன்மையை ஆராயாமல் கட்டுமான பணிகளை துவங்காதீர்!
-
துாண்களில் நீராற்றும் பணியை மேற்கொள்வதில் கவனிக்க...
Advertisement
Advertisement