காட்டுமாடு தாக்கி குதிரை பலி

தாண்டிக்குடி: தாண்டிக்குடியை சேர்ந்தவர் மணிகண்டபிரபு இவரது வளர்ப்பு குதிரை தாண்டிக்குடி சந்தன கருப்புச்சாம கோயில் அருகே உள்ள பட்டா நிலத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டது. அவ்வழியே வந்த காட்டுமாடு தாக்கியதில் இறந்தது. வனத்துறையினர் பார்வையிட்டு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தனர். மனித வனவிலங்கு மோதல் தொடர்ந்து வருவதும் இதில் உயிர் பலி அதிகரிப்பது கவலையளிப்பதாக உள்ளது. இதன் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement