இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
ஈரோடு: இமயமாய் நிமிர வேண்டிய நான், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் படு பாதாளத்திற்கு போனேன் என்று தமது கடந்த கால அரசியல் முடிவை சுட்டிக்காட்டி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசி இருக்கிறார்.
ஈராட்டில் மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் வைகோ பேசியதாவது;
கடந்த காலத்தில் நான் சில பிழைகளை செய்திருக்கிறேன். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். நம்பகத் தன்மையை நானே நாசமாக்கி கொண்டேன். என் அரசியல் வாழ்வின் நம்பகத் தன்மையை சுக்கு நூறாக்கியது. அதிமுக பொதுச்செயலாளர்(மறைந்த ஜெயலலிதாவை குறிப்பிடுகிறார்) என்னை 19 மாதங்கள் சிறையில் அடைத்தார்.
அதே அதிமுகவுடன் உடன்பாடு வைத்தததை போன்ற பிழையான, தவறான, மன்னிக்க முடியாத ஒரு முடிவு.
நாம் திமுகவுடன் கூட்டணி அமைத்தால் ஒரு இடம்கூட ஜெயிக்க முடியாது என்று கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது. 205 தொகுதிகளில் அதிமுக ஜெயிக்க போகிறது. அவர்களோடு கூட்டு வைத்தால் 25 எம்எல்ஏக்களுக்கு குறையாமல் நாம் சட்டசபைக்குள் பிரவேசிக்கலாம். கட்சி புத்துயிர் பெறும்.
இதை விட்டுவிட்டால் சந்தர்ப்பம் மீண்டும், மீண்டும் நம் கதவை தட்டாது. இந்த வாய்ப்பை விட்டு விட்டால் எதிர்காலமே நமக்கு கிடையாது என்று அவர்கள்(அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஆணித்தரமாக சொன்ன போது, திருச்சி திமுக மாநாட்டில் பேசுவதற்காக எனது குறிப்புகளை பெட்டியிலே வைத்து, மலைக்கோட்டை ரயிலுக்கு பயணத்தையும் உறுதி செய்துவிட்டு, தலைமை நிர்வாகிகள் என்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார்கள். இந்த முடிவை எடுக்க நேர்ந்தது ஏன் என்று நான் விளக்கம் தந்தேன்.
கலை உலகிலே பிரமாண்டமான திரைப்படங்கள் தந்த பாலச்சந்தரின் அரங்கேற்றம் படத்தின் கதாநாயகி போல ஆகிவிட்டேன். என் நம்பகத்தன்மையை அழித்துக் கொண்டு இந்த முடிவுக்கு வந்தேன் என்று நான் சொன்னேன். இன்றுவரை எங்கோ நிமிர்ந்து இருக்கவேண்டிய நான், அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன். மீண்டும் அப்படி நான் ஆளாகி விடக்கூடாது.
இவ்வாறு வைகோ பேசினார்.
பெட்டிக்குள் பேச வேண்டிய குறிப்புகளா அல்லது காந்தி படம் போட்ட பேப்பர் கட்டுகளா? ஜெயலலிதா ஏன் இவரை விரட்டி விட்டார் என்று தமிழ்நாட்டுக்கே தெரியும். ஒன்று இங்கே அல்லது அங்கே என்பதே லட்சியம். பணம் பத்து என்ன நாகேஷ் சொன்னதுபோல பதினொன்றையும் செய்யும். பணம் தண்ணி கழுகு. கொள்கையாவது வெங்காயமாவது.
கேக் பெட்டிக்காக ஒரு தடவை விஜயகாந்துடன் சேர்ந்தது எந்தக் கணக்கு??
ஆள்தான் உயரம்..
எங்கிருந்து இமயமாவது சரியான நகைச்சுவை.
திரு வைக்கோ அவர்களே அங்கே படு பாதாளத்தில் போனீர்கள் இங்கே வந்து பாதாள சாக்கடையில் விழுந்து கிடக்கிறர்கள்.
ஏன் நீங்கள் செய்த பிழைக்கு பரிகாரமா விஷத்தை சாப்பிட்டு உங்கள் கட்டிக்காக்க உயிரை விட்டவர்களுக்கு மரியாதை செய்யலாமே.
வயதாகிவிட்டது என்ன செய்ய ?
அடையாளம் காட்டியதே அஇஅதிமுக தான்
இவரு தனியா நின்னா டெபாசிட் வாங்க மாட்டாரு ஆனால் கூவுவது ரொம்ப ஓவர்
அண்ணே நீங்க ரொம்ப நல்லவர்ணே! யாருமே எதுவுமே கேட்கல! இருந்தாலும் அரசியல்ல நீங்க ஒரு அரங்கேற்றம் பிரமிளாங்கிறத நீங்களே ஒத்துக்கிட்டீங்க பாத்தீங்களா? உண்மையிலேயே நீங்க மனுசன் இல்லண்ணே தெய்வம்!மேலும்
-
மீண்டும் கைகுலுக்காத சூர்யா; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங்
-
சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி