' ரூ.50,000 கொடுத்தாலும் தி.மு.க., ஆட்சி முடிவது உறுதி' அ.ம.மு.க., தினகரன் ஆருடம்
மதுரை: “த.வெ.க., தலைவர் விஜய் - நடிகை திரிஷா குறித்த தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்திருக்க வேண்டும்,” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிவுறுத்தி உள்ளார்.
மதுரையில் நேற்று தினகரன் அளித்த பேட்டி:
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுவாக பேசக்கூடியவர். அவர், விஜய் - திரிஷா குறித்து தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம். அதுதான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.
மகளிர் உரிமைத்தொகையாக 50,000 ரூபாய் கொடுத்தாலும், தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி. ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என தி.மு.க., நினைக்கிறது; அது முடியாது.
ஆதிதிராவிட, பழங்குடியின மக்களின் நலத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 11,000 கோடி ரூபாய் நிதியை, தேர்தல் தோல்வி பயத்தில், மகளிருக்கு கொடுத்து தி.மு.க., அரசு மடை மாற்றம் செய்திருக்கிறது.
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்குமா இல்லையா என்று புரியாத அளவிற்கு நிலவரம் உள்ளது. இரு கட்சிகளுக்கும் பனிப்போர் நடக்கிறது.
எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வருவாரா என்பது அவரது முடிவு. 'ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபடுவோம்' என சொல்பவர்கள், அதற்காக ஒன்றிணைந்து, உறுதுணையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர்களை மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்கி விடுவர்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என நான் 'கண்டிஷன்' போடவில்லை. எங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக வேண்டும் என்பது என் விருப்பம். தமிழகத்தில், இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், தமிழகம் முழுதும் சுற்றி வருகிறார். சபரீசன் அல்ல, மாரீசனே வந்தாலும், எங்கள் தே.ஜ., கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
குக்கர் டோக்கன் கொடுத்தே வெற்றி பெற்ற நீங்க இதை சொல்ல கூடாது
ரூ 50000 க்கு பத்து ஓட்டுங்க. முன்னாடியே வாங்கியாச்சு.
கடைசி ஆயுதம் திருச்செந்தூரில் சத்துரு சம்ஹார யாகம் .அதுவும் கைகொடுக்காது.
அவர்களிடம் கொள்ளை கொள்ளையாக கொள்ளையடித்த மக்கள் பணம் உள்ளது. எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்ளுங்கள், ஆனால் வாக்களித்து தலையில் மண்ணை போட்டுக்கொண்டு ஏமாறாதீர்கள்.
“ரூ.50,000 கொடுத்தாலும் திமுக ஆட்சி முடிவது உறுதி” — அ.ம.மு.க. தினகரன் ஆருடம்.
“அது எல்லாம் சரி… முதல்ல பாஜக‑க்கு அடகு வைத்த கட்சியை மீட்க வழி பாருங்க.
அதைச் செய்ய முடியலானா, தேர்தலுக்குப் பிறகு அதிமுகவோடு சேர்த்து அமமுகயையும் பாஜக முழுக்க கபளீகரம் செய்யப்போவது உறுதி” — மக்கள் ஆருடம்.மேலும்
-
வங்கதேச புதிய பிரதமர் பதவியேற்பில் கலந்து கொள்கிறார் சபாநாயகர்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
ஏஐ உச்சி மாநாட்டை நடத்த இந்தியா சரியான இடம்; சொல்கிறது ஐநா
-
இமயமாய் நிமிர வேண்டிய நான் அதிமுகவோடு சேர்ந்ததால் படுபாதாளத்திற்கு போனேன்: வைகோ புலம்பல்
-
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9 ல் விவாதம்: கிரண் ரிஜிஜூ
-
திரும்ப, திரும்ப பொய்களை பரப்புகிறீர்களே ராகுல்; அமெரிக்க ஒப்பந்த விவகாரத்தில் அமித் ஷா பதிலடி
-
காங்., நிலைப்பாட்டில் கருத்து ஏதுமில்லை; கூட்டணி பிரிந்து விடக்கூடாது; திருமா திட்டவட்டம்