காஷ்மீர் அணி அபாரம் * கிடைக்குமா 'முதல்' பைனல்
கல்யாணி: ரஞ்சி கோப்பை தொடரில் அரையிறுதியில் வெற்றி பெற காத்திருக்கிறது ஜம்மு காஷ்மீர் அணி.
மேற்குவங்கத்தின் கல்யாணியில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஜம்மு காஷ்மீர், பெங்கால் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் பெங்கால் 328 ரன் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 198/5 ரன் எடுத்து இருந்தது.
ஷமி 8 விக்கெட்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல் அவுட்டானது. முகமது ஷமி (8 விக்.,), தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார்.
அடுத்து களமிறங்கிய பெங்கால் அணி, இரண்டாவது இன்னிங்சில் 99 ரன்னுக்கு சுருண்டது. அகுய்ப் நபி, சுனில் குமார் தலா 4 விக்கெட் சாய்த்தனர். பின், 126 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய காஷ்மீர் அணி, மூன்றாவது நாள் முடிவில் 43/2 ரன் எடுத்திருந்தது. கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில், இன்று 83 ரன் எடுக்கும் பட்சத்தில், ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதன் முறையாக காஷ்மீர் அணி, பைனலுக்கு செல்லலாம்.
லக்னோவில் நடக்கும் அரையிறுதியில் கர்நாடகா, உத்தகாண்ட் அணிகள் மோதுகின்றன. முதல் இன்னிங்சில் கர்நாடகா 736 ரன் குவித்தது. மூன்றாவது நாள் முடிவில் உத்தரகாண்ட் அணி முதல் இன்னிங்சில் 149/5 ரன் எடுத்து, 587 ரன் பின்தங்கி இருந்தது.
மேலும்
-
இம்ரான் கானுக்கு சிகிச்சை: கபில் தேவ், கவாஸ்கர் கோரிக்கை
-
துவங்கியது ஈரான்-அமெரிக்கா பேச்சு; சமரச தீர்வா-போரா: நீடிக்கும் பதற்றம்
-
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்; சென்னையில் சத்துணவு ஊழியர்கள் கைது
-
ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி
-
அரசு கல்லுாரி முதுகலை மாணவர்கள் போராட்டம்
-
குறிஞ்சிப்பாடி தொகுதியில் அ.தி.மு.க., போட்டி?