மொபைல் டேட்டாவில் செய்தது போல் ஏஐ தொழில்நுட்பத்திலும் புரட்சி செய்வோம்: முகேஷ் அம்பானி
புதுடில்லி: ''ரிலையன்ஸ், ஜியோ ஆகிய நிறுவனங்கள் ரூ.10 லட்சம் கோடி ஏஐ தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும். மொபைல் டேட்டாவில் செய்தது போல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம்'' என தொழிலதிபர் முகேஷ் அம்பானி உறுதி அளித்துள்ளார்.
டில்லியில் நடந்த ஏஐ உச்சிமாநாட்டில் முகேஷ் அம்பானி பேசியதாவது: சிறந்த ஏஐ தொழில்நுட்ப செயலி இதுவரை உருவாக்கப்படவில்லை. சிறப்பான ஏஐ தொழில்நுட்ப சகாப்தத்தை உருவாக்க முடியும். ஒரு பக்கம் அதிக செலவு செய்து ஏஐ தொழில்நுட்பத்தை அணுகக்கூடியதாக இருக்கிறது. மற்றொரு பக்கம் குறைந்த செலவிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிகிறது.
ரிலையன்ஸ், ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்த ஆண்டு தொடங்கி அடுத்த 7 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி செயற்கை நுண்ணறிவு முதலீடு செய்யும். மொபைல் டேட்டாவில் செய்தது போல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திலும் புரட்சியை ஏற்படுத்துவோம். இது முதலீடு அல்ல. வளர்ச்சி அடைந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் மூலதனம். ஜியோ இந்தியாவை இணைய சகாப்தத்துடன் இணைத்தது.
இப்போது அது ஏஐ தொழில்நுட்பத்திலும் நடக்கும். மக்கள் அனைவருக்கும், பொருளாதாரத்தின் ஒவ்வொரு துறைக்கும், சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு முயற்சியிலும் ஏஐ தொழில்நுட்பம் பயன்பாட்டை உருவாக்கும். நம்பகத்தன்மை வாய்ந்த, மலிவு விலையில் ஏஐ தொழில்நுட்பத்தை அணுக ஜியோ வழிவகை செய்யும். இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.
வாசகர் கருத்து (7)
Chinnappan Arulappan - ,இந்தியா
19 பிப்,2026 - 14:52 Report Abuse
மோடி மேலே இருக்கும் வரை எல்லா ஆட்டமும் ஆடுவார் அப்புறம் தான் வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும் 0
0
Thravisham - Bangalorw,இந்தியா
19 பிப்,2026 - 15:35Report Abuse
200ரூவா வரும் வரை எல்லா ஆட்டமும் ஆடுங்க. 0
0
vivek - ,
19 பிப்,2026 - 15:45Report Abuse
பாவம் டாஸ்மாக்கில் மிதந்து கொண்டு இருக்கும் உனக்கு புரியாது 0
0
ஆரூர் ரங் - ,
19 பிப்,2026 - 16:00Report Abuse
இந்திரா காலத்திலேயே மிகப் பெரிய அளவில் வளர்ந்த குடும்பம். ராஜிவ் ஆதரித்து லைசென்ஸ் டெண்டர்கள் வாரி வழங்கப்பட்ட அம்பானி குடும்பம். அப்போ மோடி அரசியலையே இல்லை. 0
0
Suppan - Mumbai,இந்தியா
19 பிப்,2026 - 16:32Report Abuse
சின்னப்பரே அருளப்பரே அம்பானி காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பொழுதிலிருந்தே அதன் தயவில் தொழில் செய்து வருபவர். அம்பானி குழுமத்தின் Reliance Industries தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தமிழ்நாட்டில் உணவு, சில்லறை விற்பனை, தொலைத்தொடர்பு மற்றும் எரிசக்தி என பல துறைகளில் பரவியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டின் உதயம் முதற்கொண்டு புகழ்பெற்ற பாரம்பரிய பிராண்டுகளைக் கையகப்படுத்துவதன் மூலம் இந்நிறுவனம் தனது சந்தையை விரிவுபடுத்தியுள்ளது. உங்கள் அபிமான விடியல்அரசு இவைகளையெல்லாம் வேண்டாமென்று சொல்லுமா ? 0
0
V S Venkataramani - ,இந்தியா
19 பிப்,2026 - 16:41Report Abuse
Before commenting please research. For, example, what was the cost of call time ges before 2002 and after entry of this company in the market. If I remember correctly, it was Rs.18 for incoming and Rs.24 for outgoing, which was reduced to just 40 paise when it introduced CDMA in the market. 0
0
Reply
amuthan - kanyakumari,இந்தியா
19 பிப்,2026 - 14:12 Report Abuse
251ரூ மொபைல் இன்னும் வரல 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement