பஞ்சாபில் பயங்கர சதி முறியடிப்பு; எல்லை தாண்டிய கடத்தல் கும்பல் கைது; விசாரணையில் திடுக்
சண்டிகர்: பஞ்சாபில் எல்லை தாண்டிய ஆயுத மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலை போலீசார் கைது செய்தனர். அந்த கும்பல் இடமிருந்து ஹெராயின் போதைப் பொருள்கள், 9 கைத் துப்பாக்கிகள், 12 தோட்டாக்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பஞ்சாபில் போதை பொருள் மற்றும் ஆயுத கடத்தல் கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது என ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் மாநில சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, எல்லை தாண்டிய போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் கும்பலைக் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 2.102 கிலோ ஹெராயின், 7 கைத்துப்பாக்கிகள், 9mm இரண்டு கைத்துப்பாக்கிகள் உட்பட 30 போர் கைத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்களை பறிமுதல் செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாநிலத்தில் குற்றச் செயல்களைச் செய்வதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர்களிடமிருந்து ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் பெறப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மாநில சிறப்பு படை போலீசார் வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர் என பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
எப்ஸ்டீன் விவகாரத்தில் மன்னிப்பு கோரினார் பில்கேட்ஸ்
-
வடகிழக்கு மாநில பெண்களை அவதூறாக பேசிய தம்பதி சிறையில் அடைப்பு; இனரீதியான துஷ்பிரயோகத்திற்கு கடும் கண்டனம்
-
இஸ்ரேல் சென்றார் பிரதமர் மோடி; விமான நிலையத்தில் நேரில் வரவேற்றார் நெதன்யாகு
-
லஞ்சம் வாங்கி சிக்கிய அதிகாரி வீட்டில் ரூ.4.27 கோடி பறிமுதல்
-
247 முறை வெளிநாடு பயணம், தேசவிரோத சக்திகளுடன் தொடர்பு; ராகுல் மீது பாய்ந்த மத்திய அமைச்சர்
-
அமமுகவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என்று கேட்டேனா? டிடிவி தினகரன் பதில்