குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் கொடுப்பது தவறில்லை: அண்ணாமலை
கோவை: ''ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது, என்பது தவறானதாக தெரியவில்லை; தி.மு.க., ஆட்சியில் மக்கள் அதிக துன்பப்பட்டுள்ளனர்,'' என கோவையில் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை நேரு நகரில் சக்தி கேந்திரா சார்பில் நடந்த தெருமுனை பொதுக்கூட்டத்தில் பேசிய பின் அண்ணாமலை அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இதுவரை பா.ஜ., 10 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனை பிரசார கூட்டத்தை நடத்தியுள்ளது. 20,000 இடத்தை தொட வேண்டும் என்ற இலக்கோடு உள்ளோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டர்களிடையே இணக்கம் இருக்க வேண்டும். பொதுமக்களிடையே தி.மு.க., அரசின் குறைகளை சொல்ல ஒரு வாய்ப்பாகவும் பயன்படும்.
நல்ல கண்ணுவிற்கு வயது 101. அரசியல் இலக்கணத்தோடு வாழ்ந்த தலைவர். எம்.பி., --- எம்.எல்.ஏ., வாக, அரசு பதவிகளில் இருந்ததில்லை. மக்களின் குரலாக தொடர்ந்து பேசியவர். மக்களின் அன்பை மட்டும் பெற்று ஒரு மகத்தான அரசியல் இலக்கணமாக இருந்தவர். அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலி. அவர் வாழ்ந்த விதம் எங்களைப் போன்ற அரசியல் வாழ்க்கையில் உள்ளோருக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
தே.ஜ., கூட்டணியில் நேர்கோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். என்ன, எது எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கு தலைவர்கள் உள்ளனர். அவர்கள் பார்த்துக் கொள்வர். மக்கள் நிலையான ஆட்சி தருபவர்களை மட்டுமே பார்க்கின்றனர். ஓ.பி.எஸ்.சை பொறுத்தவரை, அம்மா ஆட்சி வரவேண் டும் என்று தான் முடிவு செய்வார்.
தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை தொட்டால் ஷாக் அடிக்கிறது, சொத்துவரி கட்ட முடியவில்லை. தண்ணீர் வரியையும் உயர்த்தியுள்ளனர். ஒரு குடும்பத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்பது தவறானதாக தெரியவில்லை; மக்களுக்கு பயன்படும். ஐந்து ஆண்டுகளாக மக்கள் அதிக துன்பத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பெண்கள் இதற்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பர்.
தி.மு.க., அரசு நடப்பு நிதி ஆண்டில் மூன்று லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருக்க வேண்டும். இதிலும் 3,000 கோடி பற்றாக்குறை. சட்டத்துக்கு புறம்பாக கனிம வளம் சுரண்டப்படுகிறது. ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் மட்டுமே வருமானம் வருகிறது. ஒரே நாளில் கடனை குறைக்க முடியாது. அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். கடன் சுமையை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Let us be practical there is no way employment d by government and TN has short of labours and hence people from north are employed here. our dravidians are become addicted to alcohol and their families suffering for food. Even some developed countries there are financial assistance for job less so let it be for the needy. The current government inflated the cost of everything from milk to electricity so where the needy get help. Do you want them to beg. We must ensure no looting by politicians
லஞ்சம் எப்படியா ஒழியும். ஆட்சிக்கு வருவோரே லஞ்சம் கொடுத்து வரும் போது லஞ்சம் எப்படி ஒழியும்? லஞ்சம், மது, ரௌடிசம் வேண்டாம் என்று விரும்பும் வாக்காளர்களே இம்முறை நோட்டாவுக்கு வாக்களிப்போம். நோட்டாவின் சதவீதம் அதிகரிக்க அதிகரிக்க அரசியல் கட்சிகள் திருந்தும்
இலவசத்தில் குடும்பத்தைத் தள்ளி ஆண்களை சாராயத்தில் தள்ளும் அரசு எதற்கு.? நல்ல வேலை வாய்ப்பு இருந்தால் மக்கள் ஏன் இலவசத்தை நாட வேண்டும்.
அது என் தேர்தல் நடைபெற இருக்கும் மாநில மக்களுக்கு மட்டும் அளிக்கிறீர்கள்?
எல்லா மாநில மக்களுக்கும் அளிக்கலாமே.
10000/- கொடுப்பது தவறில்லை. ஆனா கஜானா காலி ஆய்டுமே. ஏற்கனவே திராவிட மாடல் ஆட்சியில் இலவசங்களை வாரி இரைத்து தமிழகத்தின் கடன் தொகை 10 லட்சம் கோடியாய் இருக்கு. அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சியும் இலவசங்களை வாரி இரைத்தால் மற்ற நல்ல திட்டங்களுக்கு யார் கிட்ட போய் கை ஏந்தாது. பசிச்சவனுக்கு மீன் பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். சமைத்த மீனை கொடுக்க கூடாதுன்னு ஒரு சொலவடை உண்டு. என்னவோ போடா மாதவா.
அண்ணாமலையே சொல்லிட்டாருன்னா அப்போ சரியாதான் இருக்கும்.
மருமகள் உடைத்தால் பொன்குடம், மாமியார் உடைத்தால் மண்குடம். என்ன தகிடுதம் வேலை. வருங்கால வளர்ச்சியை கெடுத்துகிறாதீங்க மக்களிடம். நாடு இருக்கிற கடனில் இது போன்ற இலவசங்கள் தேவை இல்லை.
அது ரத்தம், இது தக்காளி சட்னி.
எவ்வளவு கீழான அரசியல் பன்னுறீங்க
The then finance minister of TN brutally agreed 30k thousand crore made by one family, giving 10k to needy not any wrong policyமேலும்
-
ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் இரு மடங்கு பெரியது; பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா
-
நீதித்துறை ஊழல் குறித்த பாடத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை
-
டில்லி - ஷிம்லா போலீசாரின் மோதல் முடிவுக்கு வந்தது; இளைஞர் காங்கிரசார் 3 பேர் கைது
-
பிரதமரின் தமிழக வருகைக்கு பிறகு அதிமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சு: நயினார் நாகேந்திரன்
-
தற்செயலாக நடந்த தவறு: நீதித்துறை குறித்த பாடப்புத்தகத்திற்கு மன்னிப்பு கோரியது என்சிஇஆர்டி
-
சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்; சொல்கிறது ஈரான்