யார் இந்த கமேனி!
-நமது நிருபர்-
ஈரான் நாட்டில் 1979ம் ஆண்டு இஸ்லாமியப்புரட்சி ஏற்பட்டது. அதற்கு முன் அந்த நாட்டில் ஆட்சி நடத்தியவர் மன்னர் ஷா எனப்படும் முகமது ரெஸா பஹலவி.
அவரது ஆட்சிக்காலத்தில் ஈரான், மேற்கத்திய நாடுகளை போலவே நவீன மயமாக்கத்தை தீவிரமாக செய்து மக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கியிருந்தது. ஜனநாயக உரிமைகளும் வழங்கப்பட்டிருந்தன. வெண்மைப்புரட்சி என்ற பெயரில் ஷா மன்னர் கொண்டு வந்த நில சீர்திருத்தமும், நவீன மயமாக்கமும், மத அடிப்படைவாதிகளுக்கு பிடிக்கவில்லை.
அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். மக்களை துாண்டி போராட்டங்களில் ஈடுபடச் செய்தனர். 1977 முதல் நடந்த போராட்டங்கள், 1979ம் ஆண்டு மன்னர் ஆட்சி வீழ்த்தப்பட்டதுடன் முடிவுக்கு வந்தன.
இஸ்லாமியப் புரட்சி என்ற பெயரில் நடந்த இந்த போராட்டம் முடிவில், ருடால்ப் கொமேனி தலைமையிலான மதகுருக்கள் ஆட்சியை கைப்பற்றினர். அப்போது முதல், பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு போன்ற கடுமையான விதிமுறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆட்சியை அமல் செய்தனர். மதகுருக்கள் தான் ஆட்சியாளரை முடிவு செய்யும் முறை அமலுக்கு வந்தது.
அப்படி 1979 முதல் ஆட்சி நடத்திய ருடால்ப் கொமேனி, 1989ம் ஆண்டு காலமானார். அவருக்கு பின், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் முதன்மையானவரான அலி கமேனி (இருவரும் வேறு வேறு நபர்கள், உறவினர்கள் அல்ல), நேற்றைய இஸ்ரேல், அமெரிக்க படை தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர், 1981 முதல் 1989ம் ஆண்டு ஈரான் அதிபராகவும் இருந்தவர்.
இறந்த கமேனி யார்?
போரில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி கமேனி குறித்து விவரம் பின்வருமாறு:
* ஈரான், ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடு. இதனால், அந்த பிரிவு இஸ்லாமியர்கள், ஈரான் மதகுருவையே தங்கள் வழிகாட்டியாக கருதுகின்றனர். அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவராக கமேனி இருந்தார். அவர் மதகுருவாக மட்டுமின்றி, நாட்டின் அரசியல் மற்றும் ராணுவ அதிகாரத்தின் முக்கிய புள்ளியாகவும் இருந்து வந்தார்.
* உலகில் ஷியா பிரிவு மக்கள் வசிக்கும் நாடுகள் அனைத்துக்கும் ஈரான், நேரடியாகவும், மறைமுகமாகவும் பண உதவியும், ராணுவ உதவியும் செய்து வந்தது. இதன் பின்னணியில் இருந்தவர் கமேனி தான்.
* 1939ல் பிறந்த இவர், 1979ல் நடந்த இஸ்லாமியப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.
* புரட்சிக்குப் பிறகு ஈரானின் அதிபராகப் பதவி வகித்த இவர், 1989ல் முதல் உச்ச தலைவர் கொமேனியின் மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* இவர் சிரியா, லெபனான், ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் ஈரானின் ஆதரவு பெற்ற குழுக்களை இயக்கி வந்தார். இதன் மூலம் அந்நாடுகளின் அரசியலில் ஈரான் செல்வாக்கு பெற்றதாக இருந்து வருகிறது.
6 மாதத்திற்கு முன்னால் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 32000 பொது மக்களை தூக்கிலிட்டு, துப்பாக்கியால் படுகொலை செய்தவன். பெண்களை சிறு குற்றங்களுக்காக ஷரீஅத் சட்டப்படி கழுத்து அளவு மணலில் புதைத்து, அவர்களை கல்லால் அடித்து கொல்லும் வழக்கத்தை கொண்டு வந்தவன். அவனது சொந்த சகோதரியே பல வருடங்கள் ஈரானிய சிறையில் இருந்து, அவனது கொடுமைகளை கண்டித்து உள்ளார்.
காஷ்மீரில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொலையை கண்டிக்காமல் இந்திய அரசின் உதவியை வாங்கி கொண்டு இந்தியாவில் அமைதி வழி மர்ம நபர்கள் துன்பப்படுவதாக பொய் செய்தி பரப்பியவன். அவன் சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் டிக்கெட் வாங்கியது நல்லதே.
தமிழ்நாட்டிலும் மக்களுக்கு நல்லகாலம் பிறந்தால் நன்றாக இருக்கும்.
கொடூரன் ஒழிந்தான். இனியாவது அங்கு தேர்தல் நடத்தப்பட்டு, அங்குள்ள மக்கள் உண்மையான மக்களாட்சியை கொடுக்கக்கூடிய ஒரு சிறந்த தலைவரை பதவியில் அமர்த்தி நாடு நல்வழியில் முன்னேற முயலவேண்டும். அமைதி நிலவவேண்டும்.
மத ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் ஆட்சி அமைக்க வேண்டும். பெண்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டு சம உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். ஆணும் பெண்ணும் சமம் என்று எந்த நாடு நினைக்கிறதோ அது தலை சிறந்து விளங்கும்
ஈரான் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும்மேலும்
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணுக்கு பூஜை செய்ய அனுமதி கிடைக்குமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
-
அமெரிக்காவுடன் கைகோர்த்த பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி; போர் ஒரு மாதம் வரை நீடிக்கும் என கணிக்கும் டிரம்ப்
-
அணுசக்தி நிலையம் மீது தாக்குதல்: ஈரான் குற்றச்சாட்டு
-
டில்லி அரசின் நான்கு பெண்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி முர்மு
-
டில்லியில் நிருபர்கள் சந்திப்பை தவிர்த்த இபிஎஸ்; ஒரே வரியில் பதில்!
-
இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்: ஈரான் தகவல்