அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி
லக்னோ: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் வேன் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் டில்லியின் பிரேம் நகரில் இருந்து ராஜஸ்தானின் தோல்பூருக்கு 13 பயணிகளுடன் சென்ற வேன், நொய்டாவிலிருந்து கோரக்பூருக்குச் சென்ற டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அதிகாலை 4.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.
வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மேலும்
-
ஐக்கிய அரபு அமீரகத்தில் தவிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருங்கள்; உதவி எண்களை வெளியிட்டு மத்திய அரசு அறிவுறுத்தல்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு