13 பேருக்கு செயற்கை கால்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 671 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் தினேஷ்குமார், உரிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 13 மாற்றுத் திறனாளிகளுக்கு, 12.58 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன செயற்கை கால்கள், இருவருக்கு தொழிலாளர் நல வாரிய அட்டைகளை வழங்கினார்.

Advertisement