அ.தி.மு.க.,வினர் துண்டு பிரசுரம் வழங்கல்

கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி, 30வது வார்டு அண்ணா நகரில் நேற்று நடந்தது.


அதில் கடந்த, 2011-21 வரை, 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட நலத்திட்டங்கள், வரும் சட்ட-சபை தேர்தலையொட்டி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ள வாக்குறுதிகள் குறித்த, துண்டு
பிரசுரங்களை மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜய பாஸ்கர் பொதுமக்களிடம் வழங்கினார்.
அப்போது, பகுதி செயலாளர் சக்திவேல், முன்னாள் நகர செய-லாளர் பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் ஜெகநாதன் உள்பட, அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Advertisement