ஐக்கிய அரபு அமீரகம், சவுதி, கத்தார் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் வெளியேற அறிவுறுத்தல்
நமது நிருபர்
இஸ்ரேல், சவுதி, கத்தார், அமீரகம், எகிப்து உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல் நீடிப்பதால் இஸ்ரேல், சவுதி உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. கீழ்க்கண்ட நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
1.பஹ்ரைன்,
2.எகிப்து,
3.ஈரான்
4. ஈராக்
5. இஸ்ரேல்
6. ஜோர்டான்
7.குவைத்
8. லெபனான்
9. ஓமன்
10.கத்தார்
11. சவுதி அரேபியா
12. சிரியா
13. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ)
14. ஏமன்
ஆகிய நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உதவி தேவைப்படும் அமெரிக்கர்கள் +1-202-501-4444, +1-888-407-4747 என்ற எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை
ஈரானுக்கு எதிரான தனது ராணுவ தாக்குதல்களை அமெரிக்க ராணுவம் அதிகரிக்கும். அடுத்த கட்டமாக ஈரானுக்கு தற்போதை விட அதிக தண்டனைகள் கொடுக்கப்படும். நாங்கள் ஒரு புதிய ஆட்சியை காண விரும்புகிறோம் என்றாலும் முக்கிய விஷயம் என்னவென்றால் ஒரு வருடம் கழித்து அந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும், அவர்களிடம் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருக்காது. மேலும் எங்களை அச்சுறுத்த இந்த ட்ரோன்களும் இருக்காது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
@block_P@
ஈரானின் ஏவுகணை திறன்கள் மற்றும் அணுசக்தி திட்டங்கள் உள்ளிட்டவற்றை ஒழிக்கும் வரை ஈரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா தொடரும் என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.block_P
அந்த பயம் இருக்கணும்
Iranian sleeper cells activated inside America: Homeland Security bosses reveal go signal sent from Tehran. and top US targets now most at risk.
இந்த போரின் மிக முக்கிய காரணம், அமெரிக்க தேர்தலுக்கு முன் டிரம்ப் மீது நடத்தப்பட்ட இரு கொலை முயற்சி தாக்குதல்கள். இதன் பின்னணியில் ஈரான்தான் காரணம் என்று டிரம்ப் அறிவித்தார். அதனால் தான் பதவிக்கு வந்த உடனேயே கொமேனியை வெளியேற்ற சரியான ஒரு சமயம் பார்த்தார். இஸ்ரேல் துணையுடன் அதை முடித்தும் விட்டார்.. நேற்று கூட டிரம்ப் பேட்டியில் நான் முந்தி கொண்டேன், இல்லாவிட்டால் கொமேனி என்னை முடித்திருப்பார் என்று... இதுதான் உண்மை காரணம்
இந்த நேரத்தில் வாசகர்களின் ஆதங்கம் ஒன்று நினைவுக்கு வருகிறது. முஸ்லிம்களுக்கு நிறைய நாடுகள் இருக்கின்றன, இந்துக்களுக்கு இருப்பது ஓரே ஓரு நாடு. ஆனால் இன்றைய நிலை என்ன? முஸ்லிம் நாடுகளில் அமைதி இல்லை, நிம்மதி இல்லை, உயிர்பயத்தில் மக்கள். கேலி செய்யவில்லை, சிந்தித்து பாருங்கள்
கச்சா எண்ணெய் விலையை உயர்ந்தவே இந்த போர்....இவருக்கு நோபல் பரிசு வேணுமாம்.இவங்க தயாரித்த ஆயுதத்தை பரிசோதனை செய்யவும் ஒரு வாய்ப்பு... விற்பனையிலும் அதிக இலாபமும் கிடைக்கும்
சண்டை யாருக்கும் யாருக்கும்? சும்மா இருந்தவனை - ஈரானை - கிள்ளிவிட்டு இஸ்ரேலும் அமெரிக்காவும் வேடிக்கை காட்டுகிறது. ஈரான் அமெரிக்காவிற்கு துணை நிற்பதாக முஸ்லீம் நாடுகளை குண்டு வீசி தாக்குகிறது. அமேரிக்கா வேடிக்கை பார்க்கிறது - வயதான ஆயுதங்களை தீர்க்கவேண்டும் , மற்றவர்களை வாங்க வைக்கவும் வேண்டும். சாணக்கியத்தனம். இதில் நமது நிலைப்பாடு?
இது தேவையா? அமெரிக்கர்களே! டிரம்ப் ஐ முதலாவதாக பதவி விலகச் சொல்லுங்கள்.மேலும்
-
குவைத்தில் அமெரிக்க தூதரகம் மூடல்; ஈரானில் 787 பேர் பலி
-
பீஹாரில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் பாஜ தேசியத் தலைவர் போட்டி
-
கெடுவும் இல்லை... இழுபறியும் இல்லை...: சொல்கிறார் செல்வப்பெருந்தகை
-
துபாயில் 3 நாட்களாக தவித்த இந்தியர்கள் 580 பேர் மீட்பு
-
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் போர்; முதல் நாளில் மட்டும் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு
-
யூடியூப் சேனல்களில் உலக தலைவர்கள்; 3 கோடி பின்தொடர்வோருடன் மோடி முதலிடம்