அமித்ஷாவை சந்தித்து பேசியது என்ன? டில்லியில் இபிஎஸ் பேட்டி

23

நமது டில்லி நிருபர்




தொகுதிப் பங்கீடு பேச்சு விரைவில் தொடங்கப்படும் என டில்லி விமான நிலையித்தில் அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.

டில்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இது குறித்து டில்லி விமான நிலையத்தில் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து கலந்து பேசினோம். தேர்தலில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்தும் கலந்து பேசினோம். சசிகலா கட்சி ஆரம்பித்தது குறித்து ஏதும் பேசவில்லை.



மிக சிறப்பான, எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. தொகுதி பங்கீடு பேச்சு விரைவில் நடைபெறும். தேர்தல் தேதி ஆரம்பித்த பிறகு தான் பேசுவோம். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தான் குழப்பம் உள்ளது. எங்கள் கூட்டணி சுமுகமாக உள்ளது. அதிமுக, தேஜ கூட்டணி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Advertisement