கிக் பாக்சிங் 59 தமிழக வீராங்கனையர் பங்கேற்பு
சென்னை: தேசிய அளவிலான 'கிக் பாக்சிங்' போட்டியில், தமிழகத்தில் இருந்து, 59 பெண்கள் களமிறங்கி உள்ளனர்.
கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தென் மண்டல லீக் போட்டிகள், பெங்களூரில் நேற்று துவங்கி, 8ம் தேதி வரை நடக்கின்றன. இதில், தென் மாநிலங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.
போட்டியில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், 59 பெண்கள் தமிழக அணிக்காக களமிறங்குகின்றனர். போட்டியில் பங்கேற்பதற்காக, நேற்று அதிகாலை, சென்னை சென்ட்ரலில் இருந்து வீராங்கனையர் புறப்பட்டனர்.
'போட்டியில் சிறப்பாக விளையாடி, சாதனை படைத்து, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம்' என, வீராங்கனையர் நம்பிக்கை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரு உயிர்களைப் பலிகொடுத்த திமுகவினரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்; நயினார் ஆவேசம்
-
இருசக்கர வாகனங்களுக்கு 2 லிட்டர், கார்களுக்கு 10 லிட்டர்; வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வினியோகத்தில் ரேஷன்
-
ஈரானை நோக்கி பறந்த 80 போர் விமானங்கள்; அலை, அலையாக தாக்குதல் தொடுப்பதாக இஸ்ரேல் அறிவிப்பு
-
திமுக கூட்டணிக்கு ஈடுகொடுக்க மாற்று கூட்டணி இல்லை; திருமா
-
கோவையில் கல்லூரி மாணவி பலாத்கார வழக்கு; கைதான 3 பேருக்கும் சாகும் வரை ஆயுள்
-
யுஓஇ, சவுதி உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டது ஈரான்
Advertisement
Advertisement