சிலிண்டரை பதுக்கினால் இனி சிறை தண்டனை
சென்னை: பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒருவர் சிலிண்டர் முன்பதிவு செய்ததில் இருந்து, 21 நாட்களுக்கு பின்தான் டெலிவரி செய்யப்படும். ஒரு முறை சிலிண்டர் பதிவு செய்த பின், அடுத்த சிலிண்டருக்கு, 25 நாட்களுக்கு பின்தான் பதிவு செய்ய முடியும்.
சில காஸ் ஏஜன்சிகளில், பல மாதங்களாக சிலிண்டர் வாங்காமல் உள்ள வாடிக்கையாளர்கள் யார் என்று தெரியும். அவர்கள், வாடிக்கையாளர்கள் போல் சிலிண்டர் முன்பதிவு பதிவு செய்து, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது.
ஏஜன்சிகள் தவிர்த்து, சில கடைகளில் முறைகேடாக சிலிண்டர் விற்கப்பட்டால், பறிமுதல் செய்யப்படும்.
'எஸ்மா' எனப்படும் அத்தியவாசிய பொருள் சட்டத்தில் சமையல் காஸ் சிலிண்டர் வந்ததால், இனி சமையல் காஸ் சிலிண்டர்களை முறைகேடாக விற்றாலோ, பதுக்கலில் ஈடுபட்டாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழாண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பெட்ரோலிய நிறுவன அதிகாரிதானே பதுக்கல் குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளார்? சம்மந்தப்பட்ட தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் இது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு ஏதும் இது வரை விட்டதாகத் தெரியவில்லையே? ஏன்?
மாநில அரசு காஸ் இருப்பது தெரிந்தும் அதை எடுக்கக்கூடாது என்று சொல்வது மாநிலத்தின் உரிமை என்றால் அந்த மாநிலம்தான் எல்லா நேரங்களிலும் காஸ் ஏற்பாடு செய்து தரவேண்டும்.
புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்