ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெறக்கூடாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
வாஷிங்டன்: ''ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது. கிடைத்துவிட்டால் உடனடியாக தாக்குதல் நடத்த பயன்படுத்துவார்கள்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: இரண்டு வாரங்களுக்குள் நாங்கள் ஈரானை சின்னாபின்னமாக்கிவிட்டோம். அவர்களிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை. விமான எதிர்ப்பு ஆயுதங்கள் இல்லை, தலைமைத்துவமும் இல்லை. அவர்களின் தலைமைத்துவம் அழிக்கப்பட்டுவிட்டது. பின்னர் அவர்கள் ஒரு புதிய தலைமைத்துவத்தை அமைத்தனர், அதுவும் அழிக்கப்பட்டுவிட்டது. நாங்கள் ஒட்டுமொத்த உலகத்திற்காகவும் ஒரு மகத்தான பணியைச் செய்துள்ளோம்.
அணு ஆயுதங்கள்
கடந்த 50 ஆண்டுகளில், ஒருவேளை அதற்கும் மேலாகவும் இருக்கலாம். சித்தாந்த ரீதியாகவே மிக மோசமான நாடாகத் திகழ்ந்த, உலகத்தையே தகர்க்க விரும்பிய, ஒரு கொடிய நாட்டை நாங்கள் ஒழித்துக்கட்டியுள்ளோம். ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறக்கூடாது. ஈரானிடம் நீங்கள் அணு ஆயுதத்தைக் கொடுத்தால், உலகின் கணிசமான ஒரு பகுதி தகர்க்கப்பட்டுவிடும்; மேலும் அந்த ஆயுதம் உடனடியாகவே பயன்படுத்தப்படும்.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் அணு ஆயுதத்தை ஒருபோதும் பயன்படுத்தாது. போர்களை மிகக் குறைவாக விரும்புபவர்களில் நானும் ஒருவன். ஈரானின் தலைவர்கள் வன்முறை குணம் கொண்ட, கொடூரமான மனிதர்கள்; கடந்த மூன்று வாரங்களில் அவர்கள் 32,000 போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளனர்.
ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க வேண்டும் என்று நீங்கள் நம்பினால், உங்களிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம். ஏனெனில் அவர்கள் அந்த ஆயுதத்தை ஒரு மணி நேரத்திற்குள்ளோ அல்லது ஒரு நாளுக்குள்ளோ பயன்படுத்திவிடுவார்கள்.
விரைவில் முடிவடையும்
அவர்கள் அதைப் பயன்படுத்தி, இஸ்ரேலை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மத்திய கிழக்குப் பகுதியையுமே தகர்த்துவிடுவார்கள். அவர்களின் பெரும்பாலான ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் நாங்கள் அழித்துவிட்டோம். இது விரைவில் முடிவடையும், நமக்கு மிகவும் பாதுகாப்பான உலகம் இருக்கப் போகிறது. இதைச் செய்ய எனக்கு ஒரு கடமை இருந்தது. இவ்வாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
@block_P@
இது குறித்து துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் கூறுகையில், "ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது என்ற அதிபரின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதிபரின் தலைமையின் கீழ் நாங்கள் இந்த ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டோம். ஜனநாயகக் கட்சியினராக இருந்தாலும் சரி, குடியரசுக் கட்சியினராக இருந்தாலும் சரி, நாம் அனைவரும் நமது படைகளின் வெற்றி மற்றும் பாதுகாப்பிற்காகப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு ஜேடி வான்ஸ் கூறினார். block_P
80ல் இந்தியா அணு ஆயுத்தம் சோதனையை கண்டித்த அமெரிக்கா அதெற்கும் இந்தியா மீது பொருலாதரம் தடேய் வித்திட்டது .
அதேய் நினெய்வு வெய்துகொல்லெனும்
மடையா - மீசையே இல்லை - ஆனாலும் மண் ஒட்டிருச்சி - என்ன பண்ண
ஏன் ஈரான் IAEA வில் கையெப்பம் போட்டும் அணு ஆயுத்தம் வெய்திருக்க கூடாது அனால் இஸ்ரேல் காய்யெப்பம் போடவிலேய் அனால் அணு யுத்தம் வெய்திருக்கேலாம் ???இது என்தே விதத்தில் நியாயம் ?
எவன் கிட்டேயும் அணுகுண்டு இருக்க கூடாது, அமெரிக்கா மட்டும் என்ன உத்தமனா? அவனும் ஜப்பான் மேல 2 அணுகுண்டு போட்டான். இதுவரை தானாக எந்த நாட்டுடனும் போர்புரியாத நாடு ஈரான்தான்.
பொய்களின் மொத்த உருவம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இவர்களின் உலகம் நியதி பற்றி பேச தகுதியற்றவர்கள். ஐ.நா. சபையின் மாண்பை கெடுத்து, வீட்டோ அதிகார துஷ்பிரயோகத்தை செய்துள்ளது அமெரிக்கா. ஒவ்வொரு நாட்டின் ஸ்திரத்தன்மை எனும் இறையாண்மை கெடுத்து உலக அமைதியை கெடுப்பவர்கள் இவர்களாக இருக்கின்றனர். இவர்கள் இருவரையும் உலக நாடுகள் தனிமைப் படுத்தி பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
அமெரிக்காவின் நேர் எதிரியாக வடகொரியாவிடம் அனு ஆயுதம் உள்ளது அது அமெரிக்காவை தாக்காத டிரம்ப் ஓர் முட்டாப்பய
அணு குண்டை அமெரிக்கா தவிர யாராவது எந்த நாட்டு மேலாவது போட்ருக்காங்களா ??
அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அழிப்பதோ பிடுங்குவதோ அதுதான் இப்போதைய உலக நாடுகளின் தேவையாக இருக்க வேண்டும் .அல்லது எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்
இந்தியா அணு ஆயுதம் வைத்திருப்பதற்கும் ஈரானிடம் இருப்பதற்கும் நிறைய வித்தியாசம். ஈரானில் தீவிரவாதத்தை முழு நேர பணியாக கொண்டு மக்கள் நலனை புறக்கணிக்கும் ஆட்சி. அல் கொய்தா போன்ற பல தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா அழித்தது. தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் வளைகுடா அரபு நாடுகள் போலவே உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.
அல்கொய்தா என்ற அமைப்பை உருவாக்கியதே இந்த அமெரிக்காதான் ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட உருவாக்கப்பட்டது. இடையில் அமெரிக்காவும் அல்கொய்தாவுக்கும் இடையில் கருத்துவேறு பாடுகாரணமாக அமெரிக்காவிடம் இருந்து பிரிந்தது. அமெரிக்கா இப்பொழுது அதை தீவிரவாதம் என்கிறது.
இப்படித்தான் இந்திய அணு ஆயுதம் தயாரித்துவிட கூடாது என்று தடுத்தார்கள் நம் பாதுகாப்புக்காக செய்யும் விஷயம் தவறு அல்ல இவர்களின் கொள்கை ஒன்றுதான் ஆளுபவர்கள் வேண்டுமானால் மாறலாம் கொள்கை என்பது எல்லாம் இவர்களுக்கு கீழேதான் என்ற மமதை கொண்ட கொடூரக்குணம் கொண்ட மூர்க்கத்தனம் இனத்தில் ஊறி இருக்கு
முதலில் உன்னிடம் உள்ளதை அழித்துவிட்டு சர்வதேச அணுசக்தி முகாமையிடம் ரிப்போர்ட் ஒப்படை அப்புறம் மற்ற நாட்டிடம் இருக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய் ஒருவனிடம் இருக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய நீ யார் என்பதை சொல் நீ உலகில் மற்ற நாடுபோல நீயும் ஒரு நாடு அதுவும் பூர்வகுடிகளி கொன்று அவர்களின் நிலத்தினை பிடிங்கி வளர்ந்த யூத குடும்ப நாடு அவ்வளவே உனக்கு என்று வரலாறு கிடையாது ஒரு கலாச்சாரம் கிடையாது உலகில் பாவ செயல் செய்யும் தலைவர்கள் கொண்ட அமைப்புக்கு தலைமை பீடம் உன்னிடம் உள்ளது என்பதற்க்காக ....