குமரிக்கல்பாளையத்தில் அகழாய்வு பணி துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, காவுத்தம்பாளையம் கிராமம், குமரிக்கல்பாளையத்தில், பல நுாற்றண்டுக்கு முன், மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக நடுகல், முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், எலும்பு துண்டுகள், புதைவிடம் உள்ளிட்ட பல தொல்லியல் எச்சங்கள் தென்பட்டன.

'அந்த இடத்தில் அகழாய்வு மேற்கொண்டு, தொல்லியல் எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்' என, அப்பகுதி மக்கள், இரண்டு ஆண்டுகளாக வலியுறுத்தினர்.

தற்போது, தொல்லியல் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் - பொறுப்பு அறவாழி தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், குமரிக்கல்பாளையத்தில், தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

குமரிக்கல்பாளையம் அகழாய்வு வாயிலாக, சங்க காலத்துக்கு முந்தைய காலத்தில், அங்கு மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைக்கலாம் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement