இளைஞருக்கு வெட்டு: அண்ணன் தம்பி கைது

குன்றத்துார்: குன்றத்துார் நத்தம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் என்கிற ராகுல், 30. இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, நத்தம் பகுதி சாலையில் நடந்து சென்றார். அப்போது, மது போதையில் அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், 20, அவரது தம்பி, 17 ஆகிய இருவரும், ராகுலிடம் தகராறு செய்து கத்தியால் வெட்டினர்.

இதில் காயமடைந்த ராகுல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவரது தலையில் ஐந்து தையல் போடப்பட்டது. இந்த சம்பவத்தில், சஞ்சய் மற்றும் அவரது தம்பியை கைது செய்த குன்றத்துார் போலீசார், மேலும் விசாரித்து வருகின்றனர்.

Advertisement