செங்கல் இறக்கிய தொழிலாளி பலி

செம்மஞ்சேரி: சேலத்தை சேர்ந்தவர் கதிர்வேல், 43. மேடவாக்கத்தில் தங்கி, கூலி வேலை செய்து வந்தார். நேற்று, சோழிங்கநல்லுார், நியூ குமரன் நகரில் நடைபெறும் கட்டுமான பணிக்காக, லாரியில் இருந்து செங்கல் இறக்கி கொண்டிருந்தார்.

அப்போது, நிலை தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்து பலியானார். செம்மஞ்சேரி போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement