திமுகவின் பண பலம் ஜெயிக்காது; மக்களின் மனபலம் ஜெயிக்கும்: நயினார் நாகேந்திரன்
மதுரை: திமுகவின் பண பலம் ஜெயிக்காது. மக்களின் மன பலம் ஜெயிக்கும் என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி சார்பாக இபிஎஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.
ஆட்சியில் உள்ள திமுக அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை சொல்லி, ஒன்று, இரண்டை தவிர வேறு எதுவுமே செய்யாமல் மக்களை ஏமாற்றுகிற வகையில், திசை திருப்பியது.
முதல்வர் ஸ்டாலின் தங்களது குடும்பம் ஆள வேண்டும் என்பதற்காக பல்வேறு தவறான திட்டங்களை, தவறான செய்திகளை பரப்பி, துணை முதல்வர் உதயநிதியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என்பதற்காக, பல அறிவிப்புகளை சொல்லி இருக்கிறார்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் நேசிக்கப்படும் ரஜினிகாந்த். அவரை பற்றி ஆதவ் அர்ஜூனா மிகவும் அவதூறாக பேசியுள்ளார். விஜய் கண்டிக்காதது ஏன்? ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கேட்க வேண்டும். எங்களிடம் தொகுதி பங்கீடு குறித்து எந்தவிதமான சிக்கலும் இல்லை.
வரும் தேர்தலில் மக்கள் பலம், மக்களாட்சி ஜெயிக்கும். மக்கள் என்றைக்கும் பணம், பதவிக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள். 5 வருடம் நிம்மதியாக வாழ வேண்டும். இந்த 5 வருடம் மக்கள் பட்ட பாடு போதாதா? திமுகவின் பண பலம் ஜெயிக்காது. மக்களின் மன பலம் ஜெயிக்கும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
@block_P@
தவெக தேஜ கூட்டணிக்கு வருவது தொடர்பாக அமித்ஷா மூலம் முயற்சிகள் நடக்கிறதா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''எனக்கு எதுவும் தெரியாது; நான் டில்லிக்கு போகவில்லை. அது பற்றி எனக்கு எந்த கருத்தும் கிடையாது'' என நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார். block_P
பாராளுமன்ற தேர்தலில் 4 கோடி ரூபாய் உமது ஓட்டலில் பிடிபட்டதே அது என்ன ஆச்சு ?
நீர் சொல்லுகிறீர் பாவம் ஏழை பங்காளன் சிங்கள் டீக்கு லாட்டரி அடிக்கும் இந்திய குடிமகன்
நீர் இருக்கும் வரை எடப்பாடி இருக்கும் வரை வெற்றி என்பது எட்டா கனி அது என்றைக்கும் கிட்டா கனி
தமிழ்நாட்டில் கடந்த 2024 எம்பி தேர்தலில் எந்த பலம் வென்றதென்று சிலருக்கு தெரிந்திருந்தாலும் தெரிந்திருக்கும்...
பாஜகவுக்கு பண பலம் மட்டும் அல்ல அதிகார பலமும் சேர்ந்தே இருக்குது அதையும் sollunga
இவை இரண்டும் ஒன்று தான் என்று இவருக்கு தேர்தல் முடிவுகள் புரிய வைக்கும்!
இதை கூறுவது நாலரை கோடி புகழ்
CAG சொன்ன 7650000 கோடி இருக்கு, எலெக்டரால் பாண்ட் இருக்கு, PM கேர் இருக்கு , தங்கத்தில் ரோடு போட்ட ஒரு கிலோமீட்டர் 290 கோடி இருக்கே எடுத்து கொடுங்கள் ஏழைகள் சந்தோசமா இருப்பார்கள் எல்லாமே நீங்களே சாப்பிட்டால்
EVM
நாட்டுல எத எத யார் பேசுறதுன்னு விவஸ்தையே இல்லாம போச்சு??
3 kodi black money selavaayuduchchaa?
ஆமாம் சங்கர் உனக்கு வரலையா
அண்டா வாங்கிய சுள்ளான் பேசலாம்....
உங்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் மத பலம் என்று நினைத்து தமிழ்நாட்டு மக்களை ஏமாத்த முடியாது .
இந்துக்களை தவிர மற்ற இரு மதங்களை கொண்டாடும் திமுகவிற்கு மத பலம் இல்லையா
பணபலம் இருக்குற திமுக கட்சி பிரமுகர்களை தில்லியில் சந்திக்கிறவங்களுக்கு பணபலம் எப்படி ????மேலும்
-
ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.20 லட்சம்
-
மாலில் வாங்கி வந்த உணவில் புழு: உணவு பாதுகாப்புத்துறையில் புகார்
-
ரூ.1.60 லட்சம் பறிமுதல்
-
சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன
-
தேர்தல் பிரிவினர் சோதனை: மதுபானம், பணம் பறிமுதல்
-
'சர்க்கரை பாதிப்பு இருக்கா பல் ஈறுகளை பரிசோதிங்க '