நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது; சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
சென்னை: நடிகர் ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: மக்களுக்கு இபிஎஸ் மீது நம்பிக்கை இல்லை; அரசு மீது நம்பிக்கை இருப்பதால் தான் பெண்கள் துணிந்து புகார் அளிக்கின்றனர். அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறித்து புள்ளி விவரங்களுடன் காவல் துறை கூறியுள்ளது.
திமுக கூட்டணிக்கு 80% பெண்கள் ஆதரவு இருப்பதை தெரிந்து கொண்டு அதை தடுக்க சதி செய்கின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது போன்ற போலி நாடகத்தை நடத்த முயற்சி நடக்கிறது. ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார், அவருக்கு என ஒரு ரசிகர் மன்றம் எல்லாமே இருக்கிறது. அவரை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது என்று நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோம்.
அன்புக்கு மட்டும் தான் ரஜினிகாந்த் அடிபணிவார், மிரட்டலுக்கு அவர் அடிபணிய கூடியவர் அல்ல என்று உங்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும். திமுகவிற்கு வேண்டிய நெருங்கிய நண்பர். எங்களுக்காக 1996ல் குரல் கொடுத்தவர். அவரை மிரட்ட வேண்டிய அவசியம் திமுகவிற்கு கிடையாது.
கரூர் சம்பவத்தில் இன்னொரு கட்சி தலைவர் செந்தில் பாலாஜி மீது சில குற்றச்சாட்டுளை கூறியதால் அவரை சிபிஐ அழைத்துள்ளது. அதற்கு தகந்த விளக்கதை கொடுக்க கூடிய தைரியம் செந்தில்பாலாஜிக்கு இருக்கிறது. அதற்கு தகுந்த விளக்கத்தை அங்கு அவர் தருவார். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
after announcing about political entry, why did he back track?
திருட்டு திமுகவினரால்கூட அவரை மிரட்டி பணியவைக்கமுடியாது.
சரிங்க. அப்போ உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அவரை எப்படி பணிய வைக்கமுடியும்னு
எஜமான் குதிர்குள் இல்லை
அப்படியா.... இவர் சொன்னால் கண்டிப்பாக தவறாக தான் இருக்கும்.
அன்னிக்கு மிரட்டியோ வற்புறுத்தியோ அரசியலுக்கு வராதபடி பார்த்துக்கிட்டாங்க. இன்னைக்கு சப்போர்ட்டா பேசுகிற மாதிரி டிராமா போட்டு உண்மை அவர் வாயிலிருந்து வெளியே வராதபடி பண்ணிட்டாங்க. அதாங்க அவங்களுக்குள்ள போட்டுக்கொண்டபிசினஸ் டீல். இனிமே வயசுக்கு வந்தால் என்ன. வராட்டி போனால் என்ன.
இனிமே ரஜினி பேச்சை அவருடைய ரசிகனே கேட்கமாட்டான்.. அதனாலே ரஜினி எந்த கட்சிக்காவது ஆதரவு கொடுக்கச்சொல்லி மேலும் அசிங்கப்படவேண்டாம்.. அவர் படங்களை இப்போதெல்லாம் ரசிகனே பார்ப்பதில்லை.. சுத்த வேஸ்ட் பெல்லொவ்
நீ பார்த்தாயா... ஏன்... நீ ஒரு படத்தில் நடித்து பாரேன்.... அப்போது தெரியும் யார் படத்தை மக்கள் பார்க்கிறார்கள் என்று.... வந்துட்டான் புரளி அளக்க !!!
ரஜினி ஒரு காக்கா..
சென்னை தானே.... இவன் நிறைய வாங்கி கட்டி இருப்பான் போல் தெரிகிறது.....அதனால் தான் இப்படி சம்பந்தம் இல்லாமல் உளறி கொண்டு இருக்கிறான்.
ரஜினியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது. ஏனென்றால் அது திமுகவில் மட்டுமே முடியும். அவரை மிரட்டி பணிய வைத்து அரசியலில் வராதபடி பார்த்து கொண்டது திமுக என்று சொல்கிறாரோ.
ஆதவ்அர்ஜுனா சொன்னது தான் உண்மைமேலும்
-
முந்திரியில் பூச்சி தாக்குதல் அதிகரிப்பால் விவசாயிகள்... கவலை!மாவட்டத்தில் மகசூல் பாதியாக குறையும் அபாயம்
-
லாரி மோதி மூதாட்டி பலி
-
தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சியினர்... சுறுசுறுப்பு: பூத் ஏஜெண்டுகளுக்கும் சிறப்பு பரிசு அறிவிப்பு
-
இலவச கண் பரிசோதனை முகாம்
-
கூட்டு வழிபாடு
-
கள்ளக்குறிச்சி 4 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்