ஈரானின் தேசிய பாதுகாப்பு சபை செயலரும் மரணம்: இஸ்ரேல் அறிவிப்பு

7


டெஹ்ரான்: விமானப்படை மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானியும் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


ஈரான் மீது அமெரிக்கா மற்றும்இஸ்ரேலிய கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் அந்நாட்டின் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். மூத்த கமாண்டராக இருந்த சுலைமானியும் உயிரிழந்துள்ளார். புதிய ஆட்சியாளராக தேர்வு செய்யப்பட்ட மொஜ்தபா கமேனி நிலை குறித்து தகவல் இல்லை. அவர் காயம் அடைந்திருக்கலாம் அல்லது கோமா நிலையில் இருக்கலாம் என கூறப்படுகிறது.


இதனையடுத்து, ஈரானை வழிநடத்துவதில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஆக இருக்கும் அலி லரிஜானி முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். அமெரிக்கா உடன் அணுசக்தி பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இவரும் இருந்தார்.


இந்நிலையில், லரிஜானியை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. அதில் அவர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், ஈரான் நாட்டை தற்போது யார் நிர்வகித்து வருகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisement