கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நாமக்கல்:நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, கலெக்டரின் மின்னஞ்சலுக்கு, நேற்று காலை, 10:50 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது.


யடுத்து, வெடிகுண்டு செயலி-ழப்பு நிபுணர் குழுவினர், மோப்ப நாய் 'நிலா' உதவியுடன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் எந்த வெடி-குண்டும் சிக்காததால், புரளி என்பது தெரியவந்தது. இதனால், பணியாளர்கள் அலுவலர்கள், நிம்மதியடைந்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement