வேகத்தடையில் தவறி விழுந்து காய்கறி வியாபாரி பலி

மல்லசமுத்திரம்:வேகத்தடையில் தவறி விழுந்து காய்கறி வியாபாரி பலியானார்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, நைனாம்பட்-டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சண்முகசுந்தரம், 45; காய்கறி வியாபாரி.


இவர், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, மல்ல-சமுத்திரத்தில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு, 'ஹீரோ ஹோண்டா' டூவீலரில் சென்றார். அப்போது, மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள வேகத்த-டையில் அதிவேகமாக ஏறி இறங்கியபோது, தடுமாறி கீழே விழுந்தார்.


தலைக்கவசம் அணியாததால், தலையில் பலத்த அடிபட்டு, சம்-பவ இடத்திலேயே பலியானார். இவருக்கு மஞ்சு, 37, என்ற மனைவியும், 21 வயதில் ஒருமகளும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். விபத்து குறித்து, மல்லசமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement