சோதனைக்கு மம்தா பானர்ஜி இடையூறு: சுப்ரீம் கோர்ட் கோபம்
புதுடில்லி: மத்திய அமைப்பின் விசாரணையின் போது வேறு மாநில முதல்வர்கள் திடீரென வந்தால், அமலாக்கத்துறை எதுவும் செய்ய முடியாமல் விட்டு விடலாமா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
வழக்கு
நிலக்கரி கடத்தல் மற்றும் பணமோசடி தொடர்பான வழக்குகள் குறித்து மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஐபேக் நிறுவனத்தில் ஜனவரி 8 ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த நிறுவனம் தான் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை நிர்வகித்து வருகிறது.
இதனால், சோதனை நடந்து கொண்டிருந்தபோது ஐபேக் இயக்குநர் பிரதீக் ஜெயின் வீட்டிற்கு சென்ற மம்தா பானர்ஜி, லேப்டாப், மொபைல்போன் மற்றும் சில ஆவணங்களை எடுத்து சென்றார். இதனையடுத்து அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பிரசாத் குமார் மிஸ்ரா, என்வி அஞ்சாரியா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அதிகாரம் இல்லை
அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷிவம் திவான் வாதாடுகையில், மத்திய அரசின் ஒரு துறையை மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. சிபிஐ, போதைப்பொருள் தடுப்பு பிரிவு, வருவாய் புலனாய்வு பிரிவு மற்றும் தீவிர மோசடி விசாரணை பிரிவு ஆகியவற்றுக்கு மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடரும் அதிகாரம் இல்லை. மாநில விசாரணை அமைப்புகளான சிஐடி, லஞ்ச ஒழிப்பு பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவுக்கும் அந்த அதிகாரம் கிடையாது என வாதிட்டார்.
@block_B@அப்போது நீதிபதி மிஸ்ரா கூறியதாவது: மத்திய அமைப்பின் விசாரணைக்கு முதல்வர் தடை என்ற வழக்கத்திற்கு மாறான சூழ்நிலை வரும் போது என்ன செய்ய வேண்டும். அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் போய் விடலாமா? என கேள்வி எழுப்பினார்.
block_B
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறையினரின் புகாரின்படி, மத்திய அரசு நிர்வகிக்கும் அலுவலகத்துக்குள் முதல்வர் திடீரென உள்ளே புகுந்துள்ளார் என்றால் யார் முடிவு எடுப்பார்கள். நாளை வேறொரு அலுவலகத்துக்குள் வேறு முதல்வர் திடீரென உள்ளே நுழைவார். அப்போதும் அமலாக்கத்துறைக்கு நிவாரணம் கிடைக்காமல் இருக்கலாமா? என்றார்.
ஆபத்து
அப்போது வழக்கறிஞர் திவான் கூறுகையில், இதற்கு அரசியலமைப்பு தீர்வு ஒன்றை வழஙகி உள்ளது. விசாரணை அமைப்பு தன்னிச்சையாக செயல்படுவதை அனுமதிக்காமல் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம். அமைப்புகளை வழக்கு தொடர செய்து, நீதிமன்றங்களை நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாக்கினால், கூட்டாட்சி தத்துவத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றார்.
நீதிபதிகள் கோபம்
இந்த வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என திவன் கூறினார். அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளில் பல புதிய விஷயங்கள் உள்ளதால், கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
@block_P@இதற்கு மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, எதிர்ப்பு தெரவித்தார். அவகாசம் கேட்பது விசாரணையை தாமதப்படுத்தும் செயல். மத்திய அமைப்பு விசாரணையில் முதல்வர் தலையிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். சோதனை நடந்த இடத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்புடன் வந்த முதல்வர், சட்டநடவடிக்கைகளை மீறியுள்ளார். வலுக்கட்டாயமாக ஆவணங்களை எடுத்து சென்றார்.
block_P
மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் மேனகா குருசாமி, புதிய குற்றச்சாட்டுகள் உள்ளதால் பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றார்.
நீதிபதிகள், கூறுகையில், பதில் மனு 10 நாட்களுக்கு முன்னரே தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், விசாரணை தொடரும். குறிப்பிட்ட வழக்கில் எப்போது விசாரணை நடக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு யாரும் உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தையே ஆட்டிப்படைக்கும், அவர்களுக்கே கோபம் உண்டாக்கும் இவர் முன்பு சாமானியர்கள் நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். லக லக லக...
டுமீலுநாட்டு சகோதரர் போலத்தான் அவரும் .....
மத்திய அரசின் விசாரணையின்போது வேறு மாநில முதலமைச்சரோ அல்லது அதிகாரிகளோ அங்கே வந்தால் குந்தகம் செய்தால் அவர்களை முதலில் கைது செய்ய வேண்டும் விசாரணைக்கு குந்தகம் விளைவிப்பதாக கருதி அவர்களை ஜாமினில் வெளியே வராதபடி கைது நடவடிக்கைகளை மேட்கொள்ள வேண்டும் முதலில் எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டையைப்போல தான் தான் என்று தலைகாட்டும் இந்த இந்த அம்மையாரை அதன்படி செய்யுங்கள் மாநிலம் முன்னேறும் அமைதிகாப்ற்றப்படும்
இங்கு கூட்டாச்சி தத்துவம் கூவத்தில் மிதக்கிறது. அங்கேயும் அதேதான். இனி மம்தா மாவு கட்டை நம்பித்தான் ஓட்டு கேட்கவேண்டும்.
இந்த பிஜேபி அரசு ஒரு கோழை ,.. அவ்வளவு அராஜகம் செய்து சட்டம் ஒழுங்கை கெடுத்த இந்த மம்தா பானெர்ஜி அரசையும் திருட்டு திராவிடன் அரசையும் கலைக்காமல் வைத்து வேடிக்கை பார்க்கிறது...
சிபிஐ, வருவாய், மாநில விசாரணை அமைப்புகள் மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர அதிகாரம் இல்லையாம். மாநில நிர்வாக பிரிவின் மீது மட்டும் தான் நடவடிக்கை இருக்கும். மாநில அரசு என்றால் கவர்னர். நீதிமன்ற வழக்குகள் நிர்வாக விதிகள் புரியாமல் நாட்டை நாசம் செய்து வருகின்றன. மத்திய விசாரணை அமைப்புகள் ஒவ்வொரு கட்டத்திலும் நீதிமன்றம் நாட கூடாது. குற்றவாளி என்று ஆதாரம் இருந்தால் சிறை படுத்த முடியும். சொத்து பறிமுதல் செய்ய வேண்டும். குற்றவாளி தான் தண்டனை குறைக்க நிவாரணம் கேட்க வேண்டும். வாதிட்டு வரும் வழக்கறிஞர்களை கை- செய்ய வேண்டும்.
மத்திய அரசு துறை மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதிப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு ஆபத்து? எந்த சட்ட பிரிவில் உள்ளது மூ-னே. மாநில அரசு என்று எந்த சட்ட பிரிவில் கூறப்பட்டுள்ளது. மாநில நிறுவன 100 ல் ஒரு பிரிவு மீது தான் விசாரணை. மத்திய அரசு விசாரணை அமைப்புகள் பணி என்ன,? என்ன திமிரான வாதம். ஒரு வழக்கறிஞரா? குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் மத்திய அரசு.
அரக்கர்களின் ஆட்சி நடக்கிறது மேற்கு வாங்கத்தில். அதை உடனே அழித்து ஒழிக்க வேண்டும்.
This lady has lost all moral base to rule.Shows scant egard for rule of law challenges basic norms of orderly rule spreads anarchy.WB is langujshing no development has become a sleeping state.There are only two bright things There durga pooja and the intimidating procession by the leader at the of a hat.