பணத்தை காட்டு; வேட்பாளராகு; விஜய் அறிவிப்பால் த.வெ.க., 'ஷாக்'
- நமது நிருபர் -
'தேர்தல் செலவுக்கு விஜயிடம் எதிர்பார்க்க வேண்டாம். பணம் இருந்தால் மட்டுமே சீட் கொடுக்கப்படும்' என த.வெ.க., அறிவித்ததால், நிர்வாகிகள் பலரும் பின்வாங்கி விட்டனர். இதனால், வேட்பாளர்கள் கிடைக்காமல், த.வெ.க., தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, த.வெ.க., மாநில நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக தேர்தலில், குறைந்தது 2 கோடி ரூபாய் செலவு செய்தால் மட்டுமே, 'டிபாசிட்' கிடைக்கும் நிலைமை உள்ளது. அதனால், துணிந்து செலவு செய்யும் வசதியானவர்களுக்கு மட்டுமே 'சீட்' என, ஆரம்பத்திலேயே விஜய் சொல்லிவிட்டார்.
அதன்படி, 5 கோடி ரூபாயில் இருந்து, 20 கோடி ரூபாய் வரை செலவு செய்தால் தான், வெற்றியை நெருங்க முடியும் என்பதால், அதற்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்க த.வெ.க., தலைமை முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவள்ளூர், அரியலுார், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில், விஜய் நிர்ணயம் செய்த தகுதியுடன் கூடிய கட்சியினர் 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுடன் கடந்த 9ம் தேதி விஜய் ஆலோசனை நடத்தினார். ஆனால், ஆலோசனையில் பங்கேற்ற பின், தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பின்வாங்கி விட்டனர்.
இந்நிலையில், அடுத்தக்கட்ட வேட்பாளர் தேர்வில், 330 பேரை தேர்வு செய்து, அவர்களிடம் கட்சி தலைமை ஆலோசித்தது. அதில், 32 பேர் மட்டுமே வேட்பாளராக முன்வந்துள்ளனர். தேர்தல் செலவுக்கு தலைமை பணம் தராது என்ற நிலைப்பாட்டினால், வேட்பாளர் ஆவதற்கு மாவட்ட செயலர்கள் பலரும் முன்வரவில்லை.
இதை மனதில் வைத்துதான், 45 முதல் 60 'சீட்' கொடுத்தால், எந்த கூட்டணிக்கும் போகலாம் என மாவட்ட செயலர்கள் கூறியிருந்தனர். த.வெ.க.,வில் போட்டியிட, லட்சம் பேர் ஆர்வமாக இருந்தாலும், தலைமையின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற ஆள் கிடைக்கவில்லை. இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.,வில் ஆள் தேடும் முயற்சியில், த.வெ.க., இறங்கி உள்ளது.
இதே நிலைமைதான், புதுச்சேரியிலும் ஏற்பட்டுள்ளது. கடந்த 16ம் தேதி, வேட்பாளர்களாக தேர்வு செய்யப்பட்ட 30 பேரில், 12 பேர், தங்களால் தனியாக செலவு செய்ய முடியாது என தயக்கம் காட்டுகின்றனர். இதனால், 18ம் தேதி அறிவிக்கப்பட இருந்த புதுச்சேரி வேட்பாளர் பட்டியல் தள்ளிப் போயிருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், வேட்பாளர் தேர்வின்போது, தாராளமாக செலவு செய்ய தயாராக இருக்கிறேன் என சொல்லும் நிர்வாகிகளிடம், 'உங்களை எப்படி நம்புவது' என கேள்வி எழுப்பும் த.வெ.க., தலைமை, 'உங்களிடம் பணம் இருப்பதை உறுதி செய்ய, 1 கோடி ரூபாய்க்கு, வங்கி வரைவோலை எடுத்து, கட்சிக்கு கொடுங்கள்' என சொல்கின்றனர். இதனால், சீட் கேட்டு வந்த பலரும் தெறித்து ஓடுவதாக கட்சியினர் புலம்புகின்றனர்.
வாசகர் கருத்து (9)
SRIDHAAR.R - Trichy,இந்தியா
19 மார்,2026 - 09:13 Report Abuse
இன்று விதைத்தால் வரும் ஆட்சியாளர்களிடம் இருந்து ஜாக்பாட் அடிக்கலாம். 0
0
Reply
ஆரூர் ரங் - ,
19 மார்,2026 - 08:21 Report Abuse
ஊழலை ஒழிக்க ஒரு வேட்பாளர் தன் சொந்த நிதி 20 கோடியை செலவு செய்வது பெரும் தியாகத்தின் அறிகுறி. வரவேற்க வேண்டியதுதான். 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
19 மார்,2026 - 08:17 Report Abuse
விஜய் கட்சியில் நிற்பவர்களுக்கு ஜாக்பாட். 1 கோடி கொடுத்து அடுத்த வாரத்தில் இரண்டு கோடி முதல் 5 கோடிக்கு திமுக விலைக்கு வாங்கி விடும். போட்ட முதலீடு ஒரு வாரத்தில் 5 மடங்கு ஆகி விடும். விஜய் கட்சியில் பாதி பேர் வாபஸ் வாங்கி விடுவார்கள். 0
0
Reply
Rajinikanth - Mylapore,இந்தியா
19 மார்,2026 - 07:10 Report Abuse
5-20 கோடி செலவு செஞ்சு தேர்தலில் நிற்க கூப்பிட்டால், வருபவன் வெற்றி பெட்ரா பிறகு எவ்வாறு ஊழல் இல்ல ஆட்சி கொடுப்பான்? பிறகு எப்படி நாங்கள் தூய சக்தி என்று சொல்லிக்கொள்கிறார்கள்? 0
0
Reply
முருகன் - ,
19 மார்,2026 - 06:45 Report Abuse
இவர்கள் கூட்டணியில் சேர்ந்து இருந்தால் விஜய் வந்து விட்டார் வெற்றி உறுதி எனவும்
வர வில்லை என்ற உடன்
இனி போட்டியிட ஆட்கள் இல்லை விஜய் ஒரு செல்ல காசு என செய்திகள் வரும் 0
0
Reply
Chitra Rengarajan - ,இந்தியா
19 மார்,2026 - 06:40 Report Abuse
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை போட்டு டெப்பாசிட் தக்க வைத்துக் கொண்டு என்ன பயன். விஜயகாந்த்தை நம்பி பணம் போட்டவன் எல்லாரும் போண்டி ஆகியுள்ளார்கள். 0
0
Reply
vijay - ,
19 மார்,2026 - 06:23 Report Abuse
படத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதித்து வைத்துள்ளார். பொதுவாழ்வு என்று வந்து விட்டதால் எடுத்து செலவழித்து தான் ஆக வேண்டும் 0
0
Reply
bharathi - ,
19 மார்,2026 - 05:52 Report Abuse
superrr he must contest all 234 then 0
0
Reply
SUBBU,MADURAI - ,
19 மார்,2026 - 04:04 Report Abuse
இந்த நடிகர் ஜோசப் விஜய்யை இப்படி முட்டுச்சந்தில் கொண்டு நிறுத்தியதில் ஜான் ஆரோக்கிய சாமி, மற்றும் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் ஏஜெண்ட் ஆதவ் அர்ஜூனா இவர்கள் இருவரும்தான் மூல காரணம். இவர்கள்தான் ஆரம்பத்தில் இருந்தே திட்டமிட்டு தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி சேர விடாமல் கவனமாக பார்த்துக் கொண்டனர். நடிகர் விஜய் தமிழக அரசியலில் கரைசேர வேண்டும் என்றால் இந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் சகுனி ஆதவ் அர்ஜூனா இவர்கள் இருவரையும் தவெக கட்சியில் இருந்து உடனே நீக்க வேண்டும்
அப்போதுதான் நடிகர் ஜோசப் விஜய் அரசியலில் நீடிக்க முடியும் இல்லையென்றால் பின்னாளில் கண்டிப்பாக அவர் வருந்த வேண்டியதிருக்கும்! 0
0
Reply
மேலும்
-
வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை
-
எல்.பி.ஜி.,க்கு மாற்றாக டி.எம்.இ., காஸ் தொழில்நுட்பம்
-
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
லாரி மோதி ஒருவர் பலி
-
தாய், குழந்தை சடலம் மீட்பு
-
கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
Advertisement
Advertisement