சமூக வலைதளங்களில் அவதுாறு மாவட்ட எஸ்.பி., எச்சரிக்கை

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் புனரமைப்பு தொடர்பாக சிலர் இடையே வாய்த்தக-ராறு ஏற்பட்டது.


இந்த நில உரிமை பிரச்னை தொடர்பாக, உதவி கலெக்டர் விசா-ரணை நடத்தி வருகிறார். இது குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களை பகிர வேண்டாம். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement