மின்வாரியத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணிபுரிவோரை இட மாற்ற உத்தரவு
கோவை: கோவை கோட்ட மின்வாரியத்தில் தொடர்ந்து மூன்றாண்டுகளாக பணிபுரிவோரை இட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, ஒரே இடத்தில் மூன்றாண்டுக்கு மேலாக பணிபுரியும் அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
கோவை மின் பகிர்மானத்தில் அனைத்து வட்டத்திலும் ஒரே பிரிவில் மூன்று ஆண்டுக்கு மேலாக பலரும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் இன்னும் இட மாற்றம் செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக, உதவி தலைமை தேர்தல் அதிகாரி மணிமாலாவுக்கு கோவையை சேர்ந்த பாலாஜி என்பவர், இ-மெயில் வாயிலாக புகார் அனுப்பினார். இதன் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் பவன்குமாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2,000 வீரர்களுடன் ஈரான் விரைகிறது அமெரிக்காவின் பிரமாண்ட கப்பல்
-
ஆக்கிரமிப்பில் நிழற்குடை பொதுமக்கள் கேள்வி
-
100 சதவீத ஓட்டுப்பதிவே இலக்கு வாக்காளருக்கு விழிப்புணர்வு
-
குவாரிகளில் ஆளுங்கட்சியினர் லஞ்சம்: தேர்தல் அதிகாரியிடம் குற்றச்சாட்டு
-
முறையான தண்ணீர் திறப்பு விவசாயிகள் முறையீடு
-
படம் 3சி தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் குறைகளை சுட்டிக்காட்டிய கட்சியினர்
Advertisement
Advertisement