4 விரைவு ரயில்களின் சேவையில் இன்று மாற்றம்
சென்னை: 'சென்னை சென்ட்ரல் - கோவை உட்பட, நான்கு விரைவு ரயில்களின் இயக்கத்தில், இன்று தாமதம் ஏற்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணி இன்று நடக்கிறது. இதனால், இந்த தடத்தில் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் - கோவை, இரவு 10:30 மணி ரயில், இன்று ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்
சென்ட்ரல் - கர்நாடகா கே.எஸ்.ஆர்., பெங்களூரு, இரவு 10:50 மணி விரைவு ரயில், ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்
சென்ட்ரல் - ஈரோடு, இரவு 11:00 மணி ஏற்காடு விரைவு ரயில், 55 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்
சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் யஸ்வந்த்பூர், இரவு 11:30 மணி ரயில், ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது