எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது
நமது நிருபர்
மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து எல்பிஜி எரிவாயு சரக்கு கப்பல் 'பைக்ஸிஸ் பயோனியர் 'மங்களூரு துறைமுகம் வந்தடைந்தது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து, மத்திய கிழக்காசியாவில் போர் பதற்றம் நிலவி வருகிறது. தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி, உலக நாடுகளையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது. இந்த ஜலசந்தி சர்வதேச அளவில் எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நீர்வழிப் போக்குவரத்தாக திகழ்வதால், கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நீடித்து வரும் போர், இந்தியாவுக்கான எரிசக்தி விநியோகத்தைப் பாதித்தது. இதன் விளைவாக, வீடுகளின் சமையலறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், ஹோட்டல்கள் போன்ற வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி விநியோகம் ஆரம்பத்தில் குறைக்கப்பட்டது. ஆனாலும் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற கவலைகளுக்கு மத்தியில், அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயு சரக்கு கப்பல் ஒன்று இந்தியாவை வந்தடைந்துள்ளது.
47,236 டன் மொத்த எடை கொண்ட, எண்ணெய்க் கப்பல், காலை 6 மணியளவில் மங்களூரு துறைமுகம் வந்தடைந்தது. இந்தக் கப்பல் 'பைக்ஸிஸ் பயோனியர் ', பிப்ரவரி 14ம் தேதி டெக்சாஸிலிருந்து புறப்பட்ட நிலையில் தற்போது இந்தியா வந்து சேர்ந்துள்ளது. தற்போது நீடிக்கும் தட்டுப்பாடுகளை சமாளிக்க இந்த கப்பலில் உள்ள எல்பிஜி எரிவாயு உதவியாக இருக்கும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து (11)
SUBBU,MADURAI - ,
22 மார்,2026 - 13:42 Report Abuse
மேற்கு ஆசியா போரினால் பற்றி எரிந்துகொண்டிருக்கும் வேளையில், ஒரு அமெரிக்க LPG கப்பல் அதிகாலை 6 மணிக்கு மங்களூரில் அமைதியாக நங்கூரமிட்டது. டெக்சாஸிலிருந்து வந்த 16,714 டன் எரிபொருள் 33 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கான எரிபொருள் என்பது இதன் மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது. இது வெறும் ஒரு சரக்கு விநியோகம் மட்டுமல்ல, மத்திய கிழக்கைச் சார்ந்திருக்கும் 90 சதவீத சார்புநிலையை இந்தியா உடைத்தெறியும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயலாகும். இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு என்பது பிரதமர் மோடியின் வல்லமையாகும். 0
0
Reply
பிரேம் குமார் - ,
22 மார்,2026 - 13:01 Report Abuse
இந்தியாவின் நடுநிலை வெளியுறவுக் கொள்கையின் காரணமாக, நமது கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி (LPG) சரக்குக் கப்பல்கள் மிக பாதுகாப்பாக நமது துறைமுகங்களை வந்தடைகின்றன. இதன் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு தவிர்க்க பபட்டுள்ளது மேலும், அனைத்து மாநிலங்களுக்கும் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விநியோகத்தை 30 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தவும் மத்திய அரசால் முடிந்துள்ளது. மம்தா, ராகுல், சித்தராமையா, ஸ்டாலின் மற்றும் சிதம்பரம் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர் ஏனெனில், மத்திய அரசின் செயல்பாடுகள் சரியான பாதையில் செல்வது மட்டுமல்லாமல், அதன் அனைத்து முயற்சிகளும் வெற்றியும் பெற்று வருவதால், அரசின் தோல்விகளைச் சுட்டிக்காட்ட அவர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் மத்திய அரசு வழங்கவில்லை. 0
0
VIJAYALAKSHMI Vijayakumar - ,
22 மார்,2026 - 17:20Report Abuse
திருடனுக்கு தேள் கொட்டியமாதிரி 0
0
Reply
சந்திரசேகரன் - ,
22 மார்,2026 - 11:04 Report Abuse
எரிவாயு தட்டுப்பாடு இல்லாமல் இருந்தால் நல்லது தான் 0
0
Reply
arunachalam - Tirunelveli,இந்தியா
22 மார்,2026 - 10:51 Report Abuse
மோடி நாட்டுக்காக உழைப்பவர். 0
0
SANKAR - ,
22 மார்,2026 - 14:30Report Abuse
supply from TEXAS AMERICA 0
0
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
22 மார்,2026 - 14:44Report Abuse
சார் அமெரிக்காவில் இருந்து எரிவாயு வந்தால்.. அவர் வீட்டுக்கு வேணாமாம். இப்பவே உங்க புக்கிங் கான்செல் செஞ்சிடுங்க சார். நீங்கதான மிகப்பெரிய மானஸ்தர் ஆச்சே.. ஹாஹாஹா 0
0
SANKAR - ,
22 மார்,2026 - 16:08Report Abuse
some time back violent advises were given to reject ALL American products 0
0
vivek - ,
22 மார்,2026 - 20:10Report Abuse
sankar is shortage only for brain 0
0
Reply
raja - ,
22 மார்,2026 - 10:49 Report Abuse
எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் நல்லது தான் 0
0
SANKAR RAJAM - ,
22 மார்,2026 - 16:59Report Abuse
cylinders available in plenty.only gas is under shortage! 0
0
Reply
மேலும்
-
எலுமிச்சை கிடைத்தால் வேட்பாளர்: என்.ஆர் காங்கிரசில் அதிசயம்
-
மின்விசிறி, தண்ணீர் பாட்டிலுடன் 'பிரீமியம் ஆட்டோக்கள்' அறிமுகம்
-
'இளம் தலைமுறையினர் அறிவு செல்வம் வளர்க்கும் கடல் தாமரை புத்தக பூங்கா'
-
மெட்ரோ இளஞ்சிவப்பு தடத்தில் விரைவில் ரயில் சேவை துவக்கம்
-
பெங்களூரில் கார் சாகசம் செய்த முத்தப்பா ராய் மகனுக்கு நோட்டீஸ்
-
கால்நடை டாக்டர் இறப்பு காரணமானவர்கள் யார்?
Advertisement
Advertisement