கடையில் திருட முயன்ற வாலிபர் கைது

கொடுங்கையூர்: கொடுங்கையூர், சேலைவாயில், லட்சுமி அம்மன் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் காந்தி மோகன், 38. இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் திருட முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து விசாரித்த கொடுங்கையூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட கொடுங்கையூர், தென்றல் நகரைச் சேர்ந்த அஜித், 21 என்பவரை, நேற்று கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.

Advertisement