ஒரு ஓட்டு... ஒரு மாற்றம்! ஓட்டளிக்க விழிப்புணர்வு

நாமக்கல்; தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில், அனை-வரும் ஓட்டளிக்கும் வகையில், தேசியக்கொடி வண்ணத்தில், மூவர்ண பலுான்களை பறக்க-விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


இந்திய தேர்தல் ஆணையம் மூலம், தமிழக சட்-டசபை பொதுத்தேர்தல்-2026க்கான தேர்தல், ஏப்., 23ல் நடக்கிறது. தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் ஓட்டுபோடுவதை உறுதி செய்யும் வகையில், ஆறு சட்டசபை தொகுதிகளிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்-தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி, 'ஒரு ஓட்டு... ஒரு மாற்றம்', 'உங்கள் ஓட்டு நாட்டின் எதிர்காலம்' என, வலியுறுத்தி, தேசியக்கொடி வண்ணத்தில், மூவர்ண பலுான்-களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதையடுத்து, தேர்தல் நாளான, ஏப்., 23 குறித்து, வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்ர் ஒட்டப்பட்-டது. மேலும், மலர் சந்தை, பஸ் ஸ்டாண்ட், பூங்கா சாலை ஆகிய இடங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு, தேர்தல் விழிப்பு-ணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்-யப்பட்டது.
டி.ஆர்.ஓ., சரவணன், தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தி, அரசுத்துறை அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement