விளம்பர பதாகை அகற்றப்படாத பயணியர் நிழற்குடைகள்
முதுகுளத்துார்: முதுகுளத்துார் சுற்றியுள்ள கிராமங்களில் புதிதாக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடையில் முதல்வர், அமைச்சர் புகைப்படம் கொண்ட விளம்பர பதாகை அகற்றப்படாமல் உள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பறக்கும் படையினர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதுகுளத்துார் அருகே கீழக்கன்னிச்சேரி, பருக்கைக்குடி, புளியங்குடி, மேலச்சாக்குளம் விலக்கு ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் போட்டோ கொண்ட விளம்பர பதாகை தற்போது வரை அகற்றப்படாமல் உள்ளது.
இதனால் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நடத்தும் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும் விளம்பர பதாகை அகற்றப்படாத சூழ்நிலையால் சம்பந்தப்பட்ட பறக்கும் படையினர் ஆய்வு செய்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் விளம்பர பதாகை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்ற மவுண்ட்பார்க் பள்ளி முன்னாள் மாணவருக்கு பாராட்டு
-
சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ
-
மீன் பிடிக்க வழியின்றி மீனவர்கள் வாழ்வாதாரம்.. கேள்விக்குறி ! மணல் திட்டுகளால் பாழாகும் பழவேற்காடு ஏரி
-
தேர்தல் கெடுபிடியால் பட்டு சேலை விற்பனை...படுமந்தம்! கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரம் பாதிப்பு
-
செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,000 ஏரி, குளங்கள்..அழிவின் விளிம்பில்! தரிசு நிலங்களாக மாறி வருவதால் விவசாயிகள் வேதனை
-
ஓ.எம்.ஆரில் ரூ.1,500 கோடியில் குடிநீர் பணி முடிந்தும்..பயனில்லை! கம்பி நீட்டிய' நிறுவனங்களால் குடியிருப்புகளுக்கு சிக்கல்