சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் மீது போக்சோ

நெய்வேலி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டீக்கடைக்காரரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த ராமநாதன்குப்பத்தை சேர்ந்தவர் ராம்குமார்.36; டீக்கடை நடத்தி வருகிறார்.

இவர், யூ.கே.ஜி., படிக்கும் 4 வயது சிறுமி விளையாட சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்தனர்.

Advertisement