பள்ளி வாசல்களில் ரம்ஜான் தொழுகை

விழுப்புரம்: ரம்ஜான் பண்டிகையை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.

விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகையில், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, ஒருவரை, ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். மேலும், பலர் வீடுகளில் ஏழை மக்களுக்கு உதவிகளை வழங்கி பண்டிகையை கொண்டாடினர்.

செஞ்சி பெரிய பள்ளிவாசலில் இருந்து ஜமா அத் தலைவர் மஜீத் பாபு தலைமையில் ஊர்வலம் வந்தனர். காலை 8.30 மணிக்கு செஞ்சி கூட்ரோட்டில் பிறை கொடி ஏற்றினர். செஞ்சிக்கோட்டை சாதுத்துல்லாகான் மசூதியில் ஊர்வலம் முடிவடைந்ததும் அங்கு 9:.30 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது.

சிறுகடம்பூர் கொத்தமங்கலம் சாலை ஈத்கா மைதானத்தில் மஸ்தான் எம்.எல்.ஏ., பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி உட்பட ஏராளமானவர்கள் தொழுகை நடத்தினர்.

அவலுார்பேட்டை அவலுார்பேட்டை மசூதியில் நேற்று காலை 8:00, மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் ஈத்கா மைதானத்திற்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு, சிறப்பு வாஜிப் தொழுகையும், சொற்பொழிவும் நடந்தது. தொடர்ந்து ஏழைகளுக்கு தான, தர்மங்கள் வழங்கினர்.

திண்டிவனம் திண்டிவனம் ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 8:00 மணியளவில் நடந்த சிறப்புத் தொழுகையில், திரளான முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.

Advertisement