மோட்டார் திருடிய சகோதரர்கள் கைது

திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் நிஷார்கான், 48. இவர் பணிபுரியும் தனியார் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால், இம்மாதம் 19ல் மின் மோட்டார் உட்பட பழைய பொருட்களை, வெளியே வைத்துள்ளனர். அடுத்த நாள், மோட்டார் திருடுபோனது.

திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணையில், எல்லீஸ்புரத்தைச் சேர்ந்த சகோதரர்களான சியாம்குமார், 25, பரணி, 22, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், திருடிய மின் மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

Advertisement