தாய், மகளை திட்டிய வாலிபர் கைது

மயிலாப்பூர்: சாந்தோம், நொச்சிநகரைச் சேர்ந்த, 20 வயது கல்லுாரி மாணவி, அவரது தாயுடன் இம்மாதம் 17ல் வீட்டின் அருகே நடந்து சென்றார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய், 21, என்பவர் வழிமறித்து மாணவியையும், அவரது தாயையும் தகாத வார்த்தையால் பேசி மிரட்டி உள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் மகளிர் போலீசார் நேற்று, சஞ்சயை கைது செய்தனர்.

Advertisement