உலக அமைதிக்காக கூட்டு பிரார்த்தனை

கோவை: உலக மக்கள் நலமுடனும், அமைதியாகவும் வாழ வேண்டியும், வளைகுடா நாடுகளில் நடந்து கொண்டிருக்கும் போர் முடிவுக்கு வர வேண்டியும், ஜனகல்யாண் இயக்கம் சார்பில், கூட்டு பிரார்த்தனை, சாயிபாபா காலனியில் உள்ள நாகசாயி மந்திரில் நேற்று நடந்தது.

இதில் விஷ்ணு சகஸ்ர நாமம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்ய செய்யப்பட்டது. 300 க்கும் மேற்பட்டவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

வாராகி மணிகண்ட சுவாமிகள், ஜன கல்யாண் அகில இந்திய பொதுசெயலாளர் பாலசுப்ரமணியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement