56 காஸ் சிலிண்டர்கள் சீர்காழி அருகே பறிமுதல்

மயிலாடுதுறை:ரசீது இல்லாமல் கொண்டுவரப்பட்ட 56 காஸ் சிலிண்டர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் புறவழிச் சாலையில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மயிலாடுதுறை நோக்கி சென்ற லோடு வேனை நிறுத்தி சோதனை நடத்தியதில் உரிய ரசீது இல்லாமல் வணிக பயன்பாட்டிற்கான 56 காஸ் சிலிண்டர்களை ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினரால் சிலிண்டர்களுடன் வந்த லோடு வேனை பறிமுதல் செய்து சீர்காழி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement