புதுச்சேரியில் 6 நாளில் 135 மனுக்கள் தாக்கல்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கி கடந்த 6 நாட்களில் மொத்தம் 135 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான மனுத் தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. முதல் இரண்டு நாட்கள் மனுத் தாக்கல் செய்யவில்லை. 18ம் தேதி முதல் மனு தாக்கல் செய்யப்பட்டன. முதல் 5 நாட்களில் 134 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களுக்கு நேற்று சனிக்கிழமை ரம்ஜான் பண்டிகைக்காக பொதுவிடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. மாகியில் மட்டும் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சுயேச்சையாக ஒருவர் மட்டும் மனு தாக்கல் செய்தார். மொத்தமாக 29 தொகுதிகளில் 6 நாட்களில் 119 பேர் 135 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். ராஜ்பவன் தொகுதியில் மட்டும் இதுவரை ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை.
நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிகமானோர் மனுதாக்கல் செய்யவார்கள் என்பதால் அனைத்து தேர்தல் அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
மேலும்
-
மேற்காசிய போர் பதற்றம்; இலங்கையில் 2 வாரங்களில் 2வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
-
ஈரானும் வாழட்டும்; ஊரானும் வாழட்டும்: 'வழவழ' அறிக்கை வெளியிட்டார் கமல்
-
திமுக கூட்டணிக்கு மேலும் நெருக்கடி; வெளியேறியது தவாக!
-
தொடர் தாக்குதல் எதிரொலி: 24 மணி நேரத்தில் ஈரான் தூதரக ஊழியர்கள் வெளியேற சவுதி உத்தரவு
-
அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார்; கியூபா அதிபர் அறிவிப்பு
-
எல்பிஜி லோடு ஏற்றிய மேலும் ஒரு சரக்கு கப்பல் இந்தியா வந்தது