நா.பேட்டையில் கொட்டிய மழை

நா.பேட்டை:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. மதிய நேரங்களில் அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். வெப்பம் தணிந்து மழை பெய்யாதா என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்-தனர்.


இந்நிலையில், நாமகிரிப்பேட்டை மற்றும் அதன் சுற்று-வட்டார பகுதிகளில், நேற்று மாலை சீதோஷ்ண நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. நாமகிரிப்பேட்டை, வெள்ளக்கல்பட்டி, ஆர்.புதுப்பட்டி, மூலப்பள்ளிப்பட்டி, சீராப்பள்ளி, பேளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று மாலை, 5:15 மணி அளவில் திடீ-ரென மழை பெய்ய தொடங்கியது. 30 நிமிடம் பலத்த காற்-றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.இந்த திடீர் மழையால், சாலையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

Advertisement